நான் எழுதிய முதல் கவிதை

இயற்கை அன்னையே !
உன்னை நான் வரைந்தேன்
என்னை நான் மறந்தேன்

இந்த உலகின் அழகுகள் எல்லாம்
என்ந்தன் கவிதைக்குள்ளே
உன்னால் கொண்டு வந்தேன்!

இதுவே நான் எழுதிய முதல் கவிதை!

எங்கும் இருளைக் கண்டேன்
நிலவைக் கண்டேன்
நிலவொளியில் என் நிழலைக் கண்டேன்

அதனால் ஒரு நல்ல கவிதையை
என் கற்பனையில் கண்டேன்

வானம் கண்டு வானத்தில் மேகம் கண்டு
மேகத்தின் மேலே வானவில்லைக் கண்டு
முத்து நட்சித்திரங்களைக் கொண்டு

இன்று கவிதை எழுதும் ஏட்டைக் கொண்டு
இயற்கையே இயற்கையே
இதுவே நான் எழுதிய முதல் கவிதை!

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (24-06-97)

Leave a Reply

© 2020 Spirituality