ஜாதகத்தில் முதல் கட்டம் எது?


Astrology Study,ஜோதிடம் அறிவோம்: ஜாதக ...

ஜாதகத்தில் உள்ள முதல் வீடு (கட்டம்)

லக்கின பாவம் என கூறுவர். இது அந்த ஜாதகத்தினரின் உடல் வாகு, அழகு, நிறம், ரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலை அமைப்பு, வாழ்க்கை அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகளை குறிக்கும். மகிழ்ச்சியை அனுபவிக்கத்தல், அவருக்கான ஆயுளை குறிக்கும் பாவமாகும்.

களத்திர ஸ்தானம் என்றால் என்ன?

களதாதிர தோஷம் என்றால் என்ன? - Quora

திருமணத்துக்கு முன்னோ அல்லது பின்னோ வாழ்க்கை துணையினை குறிப்பது களத்திரம் என்ற சொல் ஆகும். ஜாதகத்தில், 7ஆம் வீடு களத்திர ஸ்தானம் எனப்படும். அதாவது, ஆணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் மனைவியினையும் பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் அவரது கணவனை குறிக்கும்.

ஜாதகத்தில் நீசம் என்றால் என்ன?

நீச்சம் என்பது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டாப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும். நீச்சம் பெற்ற கிரகம் சுமார் 10% விட குறைவான வழுவிலேயே இருக்கும்.

விவாகரத்து எந்த பாவகம்?


இறைவனை வணங்கினால் கீழே சொல்வது நடக்காது. இறைவனை அனுதினமும் வணங்காவிட்டால் நடப்பதற்கு வாய்புண்டு.

விவாகரத்து நிச்சயம் :

சுக்கிரன களத்திரக் காரகன். சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்கிரன் நல்ல விதத்தில் சுபத் தன்மை பெற்றிருந்தால் 7வது, 8வது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும். ஆனால் சுக்ரனும் கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும்.

திருமணம் நடக்க எளிய பரிகாரம் — 7 வாரம் செய்ய வேண்டிய ஒரு பரிகார எளிய வழிபாடு

தேங்காய் எடுத்து செய்ய வேண்டிய பரிகார வழிபாடு

வெள்ளிக்கிழமை — ஆணாக இருந்தால் — சுக்கிர ஓரையிலும்
செவ்வாய்கிழமை — பெண்ணாக இருந்தால் — குரு ஓரையிலும் கீழே உள்ள முறையில் வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் நடக்கும்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி துபாம் ஏற்றி பிறகு ஒரு தேங்காய் எடுத்து திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பிறகு தேங்காயை திருமணம் செய்ய வேண்டியவர்கள் உடைத்து அதனை துருவி பூவை எடுத்து அதனுடன் பாகு வெல்லம் சேர்த்து பசுமாட்டிற்கு கொண்டு கொடுக்க வேண்டும். பாகுவெல்லத்தின் நிறம் சனி மற்றும அதன் இனிப்பு சுக ;கிரன் தேங்காய் துருவல் சந்திரன் காரகத்துவம் அதனை ஒன்றாக பிசைந்து இறைவனை நினைத்து வணங்கி பிறகு நெய்வேத்தியம் செய்து அதே கோரையில் பசுமாட்டிறகு கொடுத்து வந்தால் 7 வாரம் செய்து வந்தால் 8 வது வாரம் திருமணம் நடந்து விடும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஜாதகத்தில் குரு சுக்கிரன் செவ்வாய் வக்கிரமாக இருந்தால் பின்புறமாக சுற்றி வர வேண்டும். 3 முறை சுற்றி வர வேண்டும்.

இருதார மணம் என்றால் என்ன?

ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல், மற்றொரு திருமணம் செய்யக் கூடிய நிலைக்கு அதற்கு இருதார யோகம் அல்லது இருதார தோஷம் என கூறப்படுகிறது. “ஏழாம் அதிபதியும், ஏழாமிடமும் பலவீனமாகி 11ஆம் இடம் வலுத்தால் இரண்டு திருமணம்.” என முதல் காரணமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

© 2020 Spirituality