வலது அல்லது இடது கண் துடிப்பது எதனால்?

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கண்கள் துடிப்பது ஆரோக்கியமற்ற உடல் குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சோர்வு, கண் வறட்சி, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பது, படிப்பது, சரியாகத் தூங்காமல் இருப்பது, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவை கண் இமை துடிப்புகளை உண்டாக்கும்.

எந்த கண் துடித்தால் நல்லது?
ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண் துடிப்பதால் மிக அற்புதமான, அதிர்ஷ்டகரமான பலனகளைப் பெற்றிடலாம் என நம்பப்படுகிறது.

ஆப்பிரிக்கா பழமையான கலாச்சாரம், நம்பிக்கைகளைக் கொண்டது. இங்கு வலது கண் இடது கண் என பார்க்காமல், மேல் கண் இமை துடித்தால் வெற்றியும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் என்ன நடக்கும்?
அதுவே, பெண்களின் இடது கண் துடித்தால் அது சுப அறிகுறியாக கருதப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வாழ்க்கை குறித்த நல்ல செய்திகள்.

கண் புருவம் துடிப்பது ஏன்?
கண்கள் அல்லது புருவங்களின் அருகிலிருக்கும் தசைகள் துடிப்பது அரிதாக நிகழும் தற்செயலான செயல்பாடு தான். வலது கண் அல்லது இடது கண் துடிப்பதற்கென்று பலனேதும் கிடையாது, அது மூடநம்பிக்கை தான். நீங்கள் கேள்வி பட்டது போல, இது சத்துக் குறைபாடினாலும் ஏற்படலாம்.

Eye Twitching : வலது கண், இடது கண் எது துடிச்சாலும் காரணம் இதுதானாம், அலர்ட்டா இருங்க!

கண் இமை அல்லதுகண் தசைகளின் இயக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையே கண் துடிப்பது. இதில் ஒவ்வொரு வகை துடிப்புக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இது சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை இருக்கலாம். பொதுவாக இரண்டு தசைகள் கண் சிமிட்டுவதை கட்டுப்படுத்துகிறது. ஒரு தசை கண் இமை மூடுவதையும்,. மற்றொன்று கண் இமை திறப்பதையும் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு தசைகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் கண் துடிப்பு பொதுவானது. இந்த துடிக்கும் கண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

​துடிக்கும் கண்கள் என்றால் என்ன?​

துடிக்கும் கண்கள் சிறிய அசெளகரியமானது. சமயங்களில் இது உடனடியாக சரியாகிவிடும். அப்படி கண்கள் துடித்தால் உங்கள் மன அழுத்தம் குறைக்க வேண்டும் என்று உணர்த்தும் அறிகுறிகளாக கொள்ளலாம்.
இது தீவிரமான நிலை அல்ல ஆனால் வண்டி ஓட்டும் போது முக்கியமான வேலையில் இருக்கும் நிலையில் கடுமையான சிரமம் அல்லது முற்றிலும் எரிச்சலூட்ட செய்யலாம். உடலில் மற்ற இடங்களில் பிடிப்புகள் பொதுவானவை. கண்கள் ஏன் துடிக்கின்றன. துடிக்கும் கண்களில் முக்கியமானதாக மூன்று விதமாக பார்க்கப்படுகிறது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.https://navbharattimes.indiatimes.com/dmp_orion.cms?msid=100180505&sec=health&secmsid=48909418&wapCode=tamil&apikey=tamilweba5ec97054033e061&rvMsid=96563569&isXpVdo=tml_xp&isAmp=false

​கண் நரம்புத்தசை Hemifacial Spasm​

இது நரம்புத்தசை கோளாறு ஆகும். இதில் கண் தன்னிச்சையாக மூடுவது வாய், கன்னம் மறும் கழுத்தில் உள்ள தசைகளுடன் சேர்ந்து நிகழ்கிறது. முகத்தின் ஒரு பக்கம் மட்டுமே இந்த நிலையில் இருக்கும். இந்நிலை நடுத்தர வயதான பெண்களிடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. இது கண் இமைகளின் தசைகளை இழுக்க செய்கிறது. இந்நிலையில் படிப்படியாக கண்கள் முழுவதுமாக துடிக்க செய்யும். இதற்கு காரணம் முக நரம்புகளின் எரிச்சலாக இருக்கலாம்.

​கண் இமை மயோக்கிமியா Eyelid myokymia​

கண்ணை உள்ளடக்கிய மற்றொரு நிலை இது. இது அவ்வபோது உண்டாகும். இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது.

​துடிக்கும் கண்களில் Blepharospasm​

ஒரு நரம்பு மண்டல நிலை. இது அதிகரித்த கண் சிமிட்டுதல் மற்றும் இரு கண்களையும் மூட காரணமாகிறது. சில நேரங்களில் மூளையின் ஒரு பகுதியான பாசல் கேங்க்லியா எனப்படும் குறைபாட்டுடன் இணைக்கப்படுகிறது. இது அரிதானது. இது டிஸ்டோனியா எனப்படும் ஒரு வகை இயக்க கோளாறு ஆகும். இங்கு தன்னிச்சையான இயக்கங்கள் தொடர்ந்து நீடிக்கும். நாளடைவில் மோசமாகும்.

முதலில் கண் சிமிட்டுதல் விகிதம் அதிகரிக்கிறது. மேலும் கண் இமைகள் மூடப்படுவதற்கு
கண்களை சுற்றியுள்ள தசைகள் அழுத்துவதற்கும் வழிவகுக்கிறது. இது குறிப்பிடத்தக்க செயல்பாட்டுக்கு வழிவகுக்கலாம். இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படலாம். இது கடுமையான பார்வை குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

​துடிக்கும் கண்களில் Meige syndrome​

தீங்கற்ற அத்தியாவசிய Blepharospasm உள்ளவர்கள் சமயங்களில் இந்த மீஜ் அறிகுறியை உண்டாக்குகிறார்கள். இது கண்கள், கீழ் முகம் மற்றும் தாடையை நகர்த்தும் தசைகளின் வலிமையான அடிக்கடி வலிமிகுந்த பிடிப்புகளால் உண்டாகிறது. இவர்களுக்கு நாக்கு மற்றும் தாடை மற்றும் கண் இமைகளில் பிடிப்பு இருக்கும். மூளையின் கேங்கிலியாவில் தவறு இருப்பதாக சொல்லப்படுகிறது.

துடிக்கும் கண்களை கொண்டுள்ள மக்கள் நாள்பட்ட சமயங்களில் மோசமான நிலைமையை எதிர்கொள்ளலாம்.

வீங்கிய கண் இமைகள்
இளஞ்சிவப்பு கண்கள்
வறண்ட கண்கள்
சிவப்பு கண்
எரிச்சலூட்டும் கண்
வீக்கம்.

​துடிக்கும் கண்களுக்கு என்ன காரணம்?​

துடிக்கும் கண்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
மருத்துவ காரணங்கள் தவிர சொல்லப்படும் காரணங்கள்.

  • பிரகாசமான விளக்குகள் அல்லது சூரியன்.
  • கண் சிரமம்
  • தூக்கம் இல்லாமை
  • ஒளி உணர்திறன்
  • அதிக உடல் உழைப்பு
  • சில மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • புகைத்தல் அல்லது புகையிலை பொருள்கள் பயன்படுத்துதல்
  • மது
  • காஃபின்
  • மன அழுத்தம்

துடிக்கிறதே கண்கள்..என்ன நடக்குமோ

துடிக்கிறதே கண்கள்..என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சமா? பதறாம படிங்க பலன் தெரியும்! கண்கள் துடிக்கும் போது எதுவோ நடக்கப்போகுது என்று பலரும் சொல்வார்கள். சிலருக்கு இடது கண் அடிக்கடி துடிக்கும். அதற்கான பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.  

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும். இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும், ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களும் கண் துடித்தல் பற்றி கூறப்பட்டுள்ளது. நமக்கு வரப்போகும் சுக, துக்கங்களை முன்கூட்டியே நமது உறுப்புகள் அறிந்து கொண்டு அதை மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில் துடிப்பதாக துடிசாஸ்திர நூல் கூறுகிறது.

பொதுவாக உடம்பின் இடதுபாகம் துடிப்பது நன்மை என்றும் வலது பாகம் துடித்தால் தீயது நடக்கப்போகிறது என்று உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது. முனைவர் தி. கல்பனாதேவி என்கிற வாலாம்பிகை தனது ஆய்வு கட்டுரையில் கண்கள் துடிப்பது பற்றியும் உடலில் உள்ள உறுப்புகள் துடிப்பதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அன்னைக்கு என்னை பார்க்க உள்ளே விடல.! இன்னைக்கு 1000 கண்கள் இருக்கு…கோவில் விழாவில் ஷகீலா உருக்கம் சங்க இலக்கியங்கள் பெண்டிர்க்கு நன்மையும், ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் என்று கம்பராமாயணத்திலும் இடந்துடித்த காரணம் சொல் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலித்தொகைப் பாடலில், பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆறுதல் கூறுகிறாள். நன்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை என்று எழுதப்பட்டுள்ளது. கண்கள் துடிப்பது மூலம் மாதவிக்குப் பிரிவும், கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதை, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. துடிக்கும் உச்சந்தலை சாமுத்திரிக்கா லட்சண சாஸ்திரப்படி மூளையிலிருந்து வரக்கூடிய சிக்னல் மூலம் ஒருவரின் எதிர்காரலத்தை கூறக்கூடிய உடல் துடிப்புகள் ஏற்படலாம். தலையின் உச்சிப்பகுதி துடித்தால் நமக்கு வந்த துன்பங்கள் நீங்கும், இடது பாக உச்சி துடிப்பது பெருமை என்றும் வல பாகம் துடித்தால் ஒருவித அச்சம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னந்தலை துடித்தால் எதிரிகள் தொல்லை வரும் என்றும் கூறப்படுகிறது. தலை முழுவதும் ஒருவித துடிப்பு ஏற்படும். இதனால் ஏதோ மிகப்பெரிய பண வருமானம் வரப்போவதை குறிக்கிறதாம். நெற்றி துடிப்பு ஒருவரின் நெற்றி துடிக்கும் பட்சத்தில் அவருக்கு விரைவில் பணவரவும்,

அதிக இன்பங்களும் தேடி வரப்போகின்றது என்று அர்த்தம். புருவங்கள் துடித்தால் பெருமை. இடது கண் துடித்தால் செல்வம் சேரும், வலது கண் துடித்தால் நோயும் அதனால் மருத்துவ செலவுகளும் வந்து நீங்குமாம். இடது கண் இமை துடித்தால் உங்களை தேடி விரைவில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.அதுவே உங்களின் வலது கண் இமை துடிக்கும் பட்சத்தில் உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். ஆண்களுக்கு வலது கண் ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று துடிசாஸ்திரநூல் கூறுகிறது.

ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இடது கண் அதே நேரத்தில் பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுமாம். உதடுகள் துடிக்கும் பலன் நீங்கள் பேசும் போது உங்களின் உதடுகள் துடிக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் உன்னதமாக புதிய நண்பரை விரைவில் கிடைக்கப் போவதாக அர்த்தம். அல்லது உங்கள் மனதிற்குப் பிடித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பிரிந்தவர்கள் இணையக் கூடிய வாய்ப்பும் ஏற்படும். வலது மூக்கு முழுதும் துடித்தால் சம்பத்து உண்டாம்,

இடது மூக்கு துடித்தால் சர்வம் எய்தும். கழுத்து முழுதும் துடித்தால் மரணம் வரப்போவதை உணர்த்துமாம். மருத்துவர்களை பார்ப்பது நல்லது அதே நேரத்தில் சிலருக்கு கண்கள் துடிப்பது என்பது நாள் முழுவதும் இருக்கலாம். சில நாள்களுக்கோ, வாரங்களுக்கோ, மாதங்களுக்கோகூட அது தொடரலாம். அப்படி இருக்கும்போது அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். இதுபோல துடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல கண் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

© 2020 Spirituality