திருமூலரின், திருமந்திரத்தில் -(ஆண்/ பெண் குழந்தை பிறக்க) குழந்தை குறையில்லாது பிறக்க, “உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக”(நமது பாரம்பரிய ரகசியம்)  திருமூலர் சொல்லும் தகவல்!!!

———————————————————————————————————-
#திருமூலரின்#திருமந்திரத்தில் – ( #ஆண்#பெண் #குழந்தை #பிறக்க)
#குழந்தை #குறையில்லாது #பிறக்க, “உடல் உறவு மூலம் #நல்ல #குழந்தை
#உண்டாக” (நமது #பாரம்பரிய #ரகசியம்#திருமூலர் #சொல்லும் #தகவல்!!!
———————————————————————————————————-

(உறவின் போதே ஆண்/பெண்/அலி/திறமை/ஊனம் நிற்ணயிக்க படுகிறது)

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே. (திருமந்திரம் 477)

477. இறைவன் தாய் தந்தை வழி உடலைப் படைக்கின்றான் :
உயிர்க்கு ஆண், பெண், அலி என்ற வேறுபாடு இல்லை. பெருமையுடனே வளர்கின்ற ஒளியான உயிரை ஆண் என்றோ பெண் என்றோ அலி என்றோ காண்பது கற்பனையாகும். அப்படிப்பட்ட உயிருக்கு ஏற்ற உடலை தாய் தந்தையின் தன்மையைக் கொண்டு படைப்பது சிவபெருமானின் வல்லமையாம்.

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே. (திருமந்திரம் 478)

478. கருவில் ஆண் பெண் மாற்றம் அமையும் விதம் :
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் ஆண் ஆகும். பெண் பண்பு மிகுந்தால் அவ்வுயிர் பெண்ணாகும். ஆண் பெண் பண்பு சமமானால் அவ்வுயிர் அலியாகும். ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாய் இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாய்ப் பிறக்கும். அது உலகை ஆளும். கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மை இருக்குமானால் சுக்கிலம் பாய்வது நின்று விடும்.

பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. (திருமந்திரம் 479)

479. யோகி சுக்கிலத்தைப் பாய்ச்சல் :
ஆணின் சுக்கிலம் ஆணிடமிருந்து பிரிந்து ஐந்து விரற்கிடை ஓடி விழுமாயின் பிறக்கும் உயிரின் வாழ்வு நூறு ஆண்டு. அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கிடை ஓடி விழுந்தால் அந்தஉயிரின் வாழ்வு எண்பதாண்டு. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவை இப்படி நன்றாய் உணர்ந்து பாய்ந்திடச் செய்யும் ஆற்றல் யோகிக்கு உண்டு. யோகி வேண்டியபடி சுக்கிலத்தைச் செலுத்தி விரும்பியபடி குழந்தை பெற முடியும்.
பாய்கின்ற வாயுக் குறையின் குறள் ஆகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே. (திருமந்திரம் 480)

480. சுக்கிலத்தைச் செலுத்தும் வாயுவுக்கு ஏற்பக் குழந்தையின் அங்கம் அமைதல்:
சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைந்திடின் குழந்தையானது குட்டையாய்ப் பிறக்கும். பாயும் வாயு மெலிந்திடின் முடமாகும். அவ்வாயு தடைப்பட்டால் குழந்தை கூனாய்ப் பிறக்கும். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், பெண்களுக்கு வாயு இல்லை.

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டு ஒக்கின் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (திருமந்திரம் 481)

481. கரு வளரும் காலத்தில் தாயின் வயிறு இருக்க வேண்டிய நிலைமை :
அன்னையின் வயிற்றில் கருவாக அமைந்த குழந்தைக்கு அந்த அன்னையின் வயிற்றில் மலம் மிகுமானால் அக்குழந்தை மந்த புத்தியுடையதாய் விளங்கும். அவள் வயிற்றில் நீர் மிகுமானால் அந்தக் குழந்தை ஊமையாய் விடும். மலமும் நீரும் மிகுந்து இருக்குமானால் அக்குழந்தை குருடாகிவிடும்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும்கொண்ட கால் ஒக்கிலே. (திருமந்திரம் 482)

482. மூச்சுக் காற்றின் இயல்புக்கு ஏற்பக் குழந்தையின் பால் வேறுபாடு அமையும்:
இன்ப நுகர்ச்சியின் போது ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு வலது பக்க நாசியில் (சூரிய கலையில்) இயங்கினால் ஆண் குழந்தையாகும்.
ஆண்மகனிடம் உயிர்ப்பான மூச்சு இடது பக்க நாசியில் (சந்திர கலையில்) இயங்கினால் பெண் குழந்தையாகும்.
ஆணின் மூச்சு வலது பக்க நாசியிலும், இடது பக்க நாசியிலும் இரண்டும் ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகும்.
சுக்கிலத்தைச் செலுத்தும் பிராண வாயுவுடன் அபானன் எனப்படும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோள்வளை யாட்கே. (திருமந்திரம் 483)

483. உயிர்ப்பின் இயக்கத்து ஏற்பக் கரு அமைதல் :
ஆண் பெண் இருவருக்கும் உயிர்ப்பு ஒத்து இருக்குமானால் கருவில் உள்ள குழந்தை அழகாக விளங்கும். புணரும் அக்காலத்தில் அந்த இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் பெண்ணுக்குக் கரு உண்டாக வாய்ப்பு இல்லையாகும்.

கோள்வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால்வளை உள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உரு ஆமே. (திருமந்திரம் 484)

484. பொற்சிலை எனப் பிறக்குமாறு :
பெண்ணின் வயிற்றில் அமைந்த குழந்தை அண்ணாக்கினுள்ளே விளங்கும் பேரொளி போன்றதாகும். அக் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து வளர்ந்து சூரியனின் பொன் வடிவைப் போன்று வளர்ந்து முழு வடிவத்தைப் பெறும்.

#உடலுறவில்#கணவனும்#மனைவியும்
———————————————
————-

மாதம் ஒன்றுக்கு எத்தனை முறை கணவனும்
மனைவியும் ஒன்று சேரலாம்?
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும்
பகல்,இரவு,எந்த நேரத்திலும் தாம்பத்தியம்
கொண்டுவிடுகிறார்கள்.
இதன் காரணமாக ஆண்கள்,பெண்கள் தேகம்
வெளுத்து ,வாடி,வருந்தி வலுவற்று விடுகின்றனர்.

ஆகாரம், மைதுனம் ,நித்திரை,பயம் இந்த
நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இரு பாலரும்
இருத்தல் அவசியம்.இதில்
பாதிப்பு ஆண்களுக்கே அதிகம்.பகற்பொழுதில்
ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.இதனால்
ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும்,என்று
இராமலிங்க ஸ்வாமிகள் சொல்லியுள்ளார்
ஆகாரம் ,மைதுனம் ,ஆகிய இரண்டிலும் மிக்க
ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும்.
இல்லை எனில் தேஹமானது அதி சீக்கிரத்தில்
கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும்
இராமலிங்க ஸ்வாமிகள் கூறுகிறார்.

சுக்கிலமாகிய திரியை விசேஷமாக
தூண்டி ,அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு
செய்தால் ,திரியானது அணைந்து போய் ,ஆயுளாகிய
பிரகாசத்தை பாழ்படுத்திவிடும் ..960
நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம்
செய்து ஆபாசப்பட்ட
சுக்கிலத்தை வெளிப்படுதிவிடவேண்டும்
என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.60
நாழிகை என்பது ஒரு நாள் .960
நாழிகை என்பது 16 நாளாகும் இந்த
கணக்குப்படி மாதம்
இரண்டுமுறை மட்டுமே தனது நன்
மனையாளை மருவுதல் வேண்டும்.இதற்க்
கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக
நேரிடுமென்றும் ,ஆண்களுக்குரிய வீரியமும்,
விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல்
ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம்.பெண்க
ளுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில்
பிணி உண்டாகுமென்றும்,ருதுவில் பிரச்னையும்
எற்ப்படுமென்கிறது சாஸ்திரம்..

சுத்த இரத்தம் 60 துளிகள்
கொண்டது ஒரு துளி விந்துவாகும்.ஆண்கள்
வீரியத்தை பலமுறை வெளியேற்றினால்
அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன்
மூலம் அறியலாம்.

இவ்வாறு அபரிமிதமான இத்தம்
குறையவே ஜீவாக்கினி குறைகிறது.ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத்
தொழில் கெட்டு ,அதனால் தேஹம்
தளர்ந்து ,முகம்
வெளுத்து ,கண்ணின்தகுதி குறைந்து கண்பார்வை
மங்கி , ஜீரண சக்தி குறைந்து ,ஞாபக
சக்தி குறைந்து,மொத்தத்தில்
பலவீனமாகி ,கைகால்கள் நடுக்கம்,
மூட்டு வீக்கம் உண்டாகி,
நடைதளர்ந்து சோர்ந்து, பல தீராத
வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான் ..

எனவே தம்பதிகள் இந்த
நடைமுறையை கையாண்டால் தேக
சௌக்கியமுடன் நல்ல
குழந்தைகளை பெற்று வாழ்வில்
நலமடைவார்களென்று மனுஸ்மிர்தி கூறுகிறது.

#குழந்தை#குறையில்லாது#பிறக்க#திருமூலர்
#சொல்லும் # தகவல்!!!
———————————————
——————–

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது.
அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு
நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி
அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன்
கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில
வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்
என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை
கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான
திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6
ஆயிரம் முதல் கி.மு.100 வரையில்
வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)

ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது
என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான்
என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின்
போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி
மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால்
குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று
கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு
நிலையை அறிந்து, பொறுமை காத்து,
மனைவியுடன் கூடிக் குலாவி கலவி
செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும்
கூறுகிறார்.

கணவனும், மனைவியும் கூடும் முறையால்,
எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு
திருமூலர் தரும் விளக்கம்……

மனைவியுடன் கணவன் உறவு
கொள்ளும்போது அவனது சுவாசமானது
சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு
இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை
எதுவும் இருக்காது.

உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக
சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும்.
சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண்
குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின்
வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால்
பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல்,
பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக
இருக்கும்.

ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து
போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக
இருக்கும்.

சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல்
இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும்
குழந்தை முடமாகும்.

சுவாசத்தின் அளவு குறைந்தும்,
திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும்
குழந்தைக்கு கூன் விழும்.

இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும்
திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள்
எந்த நிலையில் இருக்க வேண்டும்
என்பதையும் பட்டியலிடுகிறார்.

கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம்
சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால்
பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக
இருக்கும்.

இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர்
தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை
ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும்
சரியான அளவில் தேங்கி இருக்குமானால்
பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.

சரி… எந்த நிலையில் தான் நல்ல,
ஆரோக்கியமான குழந்தை பெற முடியும்
என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின்
பதில்.

தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண்
இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக
இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு
வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து,
பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை)
சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த
அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க
மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன்
எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி,
கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில்
மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற
முடியும். அவ்வாறு இருக்கும் போது,
குழந்தையின் தோற்றத்திலும் தான்
விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.

இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த
நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது
பற்றியும் கூறியுள்ளார்.

உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே
திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும்
தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி,
அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.

ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும்
இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில்
அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க
வேண்டும்.

தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை
ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை
துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும்.

அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக்
கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை
வெளியிட வேண்டும். இதில் வேகம்
காட்டுவது வீண் கரு கலைதலுக்கு
ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.

” #உடல்#உறவு# மூலம் # நல்ல #குழந்தை
#உண்டாக
(நமது பாரம்பரிய ரகசியம்)

உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல
நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய
நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு
பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது
உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண்
ஆகும்.

சுழிமுனை நடக்கும் போது
உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது
அமாவாசையன்று கருவானால் கருப்பு
நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும்
குழந்தை பிறக்கும்
தொலை தூரம் சென்று வந்த பொழுது
உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை
அறிவில்லாத குழந்தை ஆகும்.

அமாவாசை கழித்து பிரதமையில் கரு
உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்
அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால்
அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
முழு நிலவுவில் உடலுறவு கொண்டு
கருவானால் முடமாகவும், தண்டியாகவும்
குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.

முழுநிலவு கழித்துப் பிரதமையில்
கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத்
தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை
பிறக்கும்.
பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை
பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம்,
முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப்
பிறக்கும்.

பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால்
குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

உடலுறவு கொள்ளும் பொழுது வேறு
பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால்
அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது
நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.
பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த
உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை
மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு
கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை
பிறக்கும்.

ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள்
உடலுறவு கொண்டபோது கருவானால்
குழந்தை திருடனாகப் பிறக்கும்.

நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
வறுமையில் வாடும்.

ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை
கல்வியில் சிறந்து விளங்கும்.

ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள்
கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.
ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை
பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய
குழந்தை பிறக்கும்.

எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை
தரித்திரத்தில் வாழும்.

ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால்
செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும்
குழந்தை பிறக்கும்.

பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம்
மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள
குழந்தை பிறக்கும்.

பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால்
நோயுள்ள குழந்தை பிறக்கும்.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால்
பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள
குழந்தை பிறக்கும்.

பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால்
அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும்
விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.
பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக
இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக்
குழந்தை பிறக்கும்.

பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர்
அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும்
உள்ள குழந்தை பிறக்கும்.

பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய
ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும்
ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.

#குழந்தை#பெற #உடலுறவு #கொள்ள #வேண்டிய
#நாள்கள்

மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே
குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள்.
திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக
வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை
மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி
இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது
உதவும்.
ஆனால்,சில ஆண்கள் தன் ஆண்மையை
உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி
ஓராண்டிலே குழந்தை பெற்றுக் கொள்வர்.

சிலருக்கு திருமணமாகி சில ஆண்டுகள்
ஆகியும் குழந்தை பிறப்பதில்லை.
குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள்
உண்டு. ஆண்களின் விந்தில், உயிரணு
இல்லாமல் இருத்தல் அல்லது உயிரணுக்களின்
எண்ணிக்கை குறைவாய் இருத்தல். பெண்ணின்
கருக்குழாயில் அடைப்பு அல்லது கருப்பை
பாதிப்பு.
பொதுவாக, குழந்தை இல்லை யென்றதும்
பெண்தான் காரணம் என்று ஆண் மறுமணம்
செய்து கொள்கிறான். இது தப்பு மட்டுமல்ல
குற்றமும் ஆகும்.

குழந்தை இன்மைக்கு பெண்ணைக் காட்டிலும்
ஆணே பெரும்பாலும் காரணம். எனவே,
இருவரும் சோதனை செய்து யாரிடம் குறை
என்று கண்டு அதைச் சரி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் சரி செய்துவிட முடியும். அந்த
அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.
குழந்தை பெற உரிய நாட்களில் உடலுறவு
கொள்ளாமையும் குழந்தையின்மைக்கு ஒரு
காரணம். எனவே, அந்த நாள்களை அறிந்து
உடலுறவு கொள்ள வேண்டும்.

மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15
ஆகிய மூன்று நாள்கள் உடலுறவு கொண்டால்
குழந்தை பிறக்கும். அதிலும் குறிப்பாக 14, 15
ஆகிய இரு நாள்களும் மிகச் சரியான நாள்கள்.
காரணம் 14, 15ஆம் நாள்களில்தான் பெண்ணின்
சினையணு கருவுற தயார்நிலையில்
இருக்கும்.
இந்த நாள்களுக்கு முன்னோ பின்னோ
உடலுறவு கொள்வதால் குழந்தை பிறக்காது.
இந்த உண்மை தெரியாததால் குழந்தை
பிறப்புத் தள்ளிப் போகிறது.

குழந்தை வேண்டாம் என்பவர்கள் மாத விலக்கு
வந்தபின் 11, 12, 13, 14, 15 ஆகிய நாள்களில்
உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
14, 15ஆவது நாள்கள்தான் உரிய நாள்கள்
என்றாலும், 11, 12, 13 நாள்களில் உடலுறவு
கொள்ளும்போது வெளியேறிய விந்து
பெண்ணுருப்பில் ஓரிரு நாள்கள் உயிர்வாழும்.
அதிலுள்ள உயிரணு மூலம் குழந்தை பெற
வாய்ப்பு வரும். அதனால், 11, 12, 13 ஆகிய
நாள்களும் விலக்கப்பட வேண்டும்.
பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும்
இதை அறிந்து வைத்திருக்க வேண்டியது
அவசியம்.

இந்த விவரம் அறிந்திருந்தால்
தேவையில்லாமல் பெண் கருவுறவும்,
கருக்கலைப்புச் செய்து உடல் பாதிக்கவோ
வேண்டிய நிலை வராது.

நன்றி

See less

நாவல் பழம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..! நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். ——————————————————————————————————————————–

நாவல் பழத்தின் நன்மைகள் (Benefits Of Jamun Fruits)

1. ஹீமோகுளோபின் எண்ணிக்கை மேம்படும்
2. ஆரோக்கியமான சருமம் …
3. நீரிழிவு மேலாண்மை …
4. இதய ஆரோக்கியம் மேம்படும் …
5. எடை குறையும் …
6. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் …
7. வாய் ஆரோக்கியம் மேம்படும்

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு  தடுக்கப்படுகிறது. 

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும். 

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

நாவல்பழம் வெறும் பழமல்ல… 6 நன்மைகளை அள்ளித்தரும் அற்புத பொக்கிஷம்!

நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம். ஆடி மாதம் தொடங்கிவிட்டால் நாவல் பழம் கைக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். அடுத்த மாதம் ஆடியும் வந்துவிடும் நாவல் பழமும் வந்துவிடும்.

நாவல் பழம் மட்டுமல்ல அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இயற்கை நமக்குக் கொடுக்கும் வரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ஆர்திரிட்டிஸ் என பல நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். வயிறு உப்புசத்தை இந்தப் பழம் தவிர்க்கிறது. 

நாவல் பழத்தின் 6 மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:

சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்:
ரத்தசோகை இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் தவறாமல் நாவல் பழத்தை சாப்பிடுங்கள். நாவல்பழத்தில் இரும்புச்சத்தும், வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகமாகிறது. இது உங்களின் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்வதை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஈறுகளை பலப்படுத்தும்:
ஈறுகளின் ரத்தக் கசிவு இருந்தால் நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வாங்கள். அதுமட்டுமல்ல நாவல் மர இலைகளையும் மென்று துப்பலாம். அந்தச்சாறில் இருந்து ஆன்ட்டிபாக்டீரியல் தன்மை பல் ஈறு பிரச்சனையை சரி செய்யும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நாவல் பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை ஆண்ட்டி ஆக்சிடன்டுகளின் உறைவிடம் எனலாம். மேலும் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன உள்ளன. கண்ணுக்கு நல்லது. தோலில் உள்ள சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கும்.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
நாவல் பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். இதில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நாவல்பழம் வெறும் பழமல்ல...  6 நன்மைகளை அள்ளித்தரும் அற்புத பொக்கிஷம்!

உடல் எடையைக் குறைக்க உதவும்:
உடல் பருமன், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணம். இந்நிலையில் நாவல் பழத்தை உட்கொண்டு வந்தால் அது உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
உலகளவில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். பதின்ம வயதில் உள்ளவர்களுக்குக் கூட சர்க்கரை நோய் வருகிறது.. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளக் கூடிய பழம் நாவல் பழம். நாவல் பழ விதைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன. அவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சீசனில் நாவல் பழத்தை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. 

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க  வல்லது. 

குரு இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

குரு இல்லாமல் வாழ்க்கை முழுமை பெறாது. குருவே அனைத்தையும் கரைத்து நல்வழி படுத்துவார். வாழ்க வாழ்க என்று குருவை மனதிற்குள் வாழ்த்துங்கள். குருவே திருவருளாள் உங்களை காப்பாற்ற உள்ளிருந்து வாழ்த்துவார். வாழ்க குருவே வாழ்க!

எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது எனக் கூறுவது ஏன்?

உப்பு, எண்ணெய் ஆகியவை ஈமச் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது. உடலை அடக்கம் செய்யும் போது புதை குழிக்குள் உப்பு, விபூதி ஆகியவை அதிகளவில் தூவப்படும்.

உறவு முறைகளை அறுக்கக் கூடிய பொருட்களாக கல் உப்பு, நல்லெண்ணெய் ஆகியவை கருதப்படுவதால், இவற்றை பிறந்த வீட்டில் இருந்து வாங்குவதை திருமணமான பெண்கள் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற பொருட்களை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு பெண்கள் கொண்டு சென்றால் இரு குடும்பத்தினர் இடையே வாய் வார்த்தையாக துவங்கும் சண்டை நாளடைவில் கருத்து வேறுபாடு, கைகலப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்ப்பது நல்லது.

நிசுவாசம்‌, உசுவாசம்‌, சப்தாதி, சரீரவியாபாரங்கள் என்றால் என்ன? – சரவித்தை

“நிசுவாசம்” (Nisvāsam) என்பது சுவாசம் அல்லது மூச்சு விடுதல் என்பதைக் குறிக்கிறது. இது உடலின் உயிர் நிலைச் செயற்பாட்டின் முக்கிய அங்கமாகும்.

இது யோகப் பயிற்சிகள் மற்றும் ஆன்மீகத் தத்துவங்களில் முக்கியமாகக் காணப்படுகிறது. சுவாசத்தின் முறையைப் பொறுத்து, அது மனதை அமைதியடையச் செய்கிறது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூச்சுக்குழல்களை சீரான முறையில் மற்றும் ஆழமாகப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவரின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படக்கூடும்.

உசுவாசம்‌ என்றால் என்ன?
“உசுவாசம்” (Usvāsa) என்பது சுவாசம் அல்லது மூச்சு விடுதல் என்பதைக் குறிக்கிறது. இது இந்திய ஆன்மீக மற்றும் தத்துவத் துறைகளில் பொதுவாகக் காணப்படுகிறது.

சுவாசம், உடல் மற்றும் மனதின் வாழ்க்கை சக்தி மற்றும் உள்மருந்தாகக் கருதப்படுகிறது. மூச்சுக்குழல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும், சுவாசம் மூலம் நாம் ஒவ்வொரு கணமும் நலமாக இருக்க வேண்டும் என்பதையும், இது ஆன்மீக முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உசுவாசம், மேலும், ஆழ்ந்த தியானம் அல்லது யோகா பயிற்சிகளில் ஒரு முக்கிய பாகமாக இருக்கலாம், இது சுவாசத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது மற்றும் உள்மனதை அமைதியாகக் கொள்ள உதவுகிறது.

சப்தாதி என்றால் என்ன?

“சப்தாதி” (Sapthādi) என்பது சங்கீதத்தில் மற்றும் ஷாஸ்திரங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்து ஆகும். இது “சப்த” (எழு) மற்றும் “ஆதி” (ஆரம்பம்) என்பவற்றின் சேர்க்கை ஆகும். “சப்தாதி” என்பது “எழு மற்றும் அதன் சார்ந்த அனைத்தும்” என்று பொருள்.

சங்கீதத்தில், இது குறிப்பாக சப்த ராகங்கள் அல்லது சப்த ராகங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் குறியீடுகளை குறிக்கலாம்.

இந்த விவகாரத்தில், “சப்தாதி” என்பது ஒரு வகையான இசை அமைப்பை, அதன் அமைப்பு மற்றும் விதிகளை குறிப்பதாகவும் இருக்கக்கூடும்.

சப்தாதி என்பது ஒரு குறிப்பிட்ட கலைத்திறனை அல்லது அதன் வகைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சில பாடல்களை அல்லது இசைக் கருவிகளை குறிப்பிடக் கூடும்.

சரீரவியாபாரங்களும்‌ என்றால் என்ன?

“சரீரவியாபாரங்கள்” (Sharīra-Vyāpārāṅgaḷ) என்பது உடலின் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்களை குறிக்கும் ஒரு சொல். இவை உடல் செயல்திறன்கள் மற்றும் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் உடலியல் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.

சரீரவியாபாரங்கள் உடலின் இயல்பு மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய முக்கிய தகவல்களை அளிக்கின்றன. இவை கீழ்காணும் வகைகளில் இருக்கலாம்:

  1. உடல் செயல்பாடுகள்: சுவாசம், இருதய துடிப்பு, இரத்த ஓட்டம், நரம்பியல் செயல்பாடுகள் போன்றவை.
  2. உடல் இயக்கங்கள்: காச்சி, வரையறை மற்றும் எலும்பின் இயக்கங்கள், தசைகளின் இயக்கங்கள் போன்றவை.
  3. உடல் நலன்: சாப்பிடுதல், உறங்குதல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் உடலின் நலனுக்கு உதவுகின்றன.

சரீரவியாபாரங்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மற்றும் மனிதனைச் சரியான நிலைக்கு கொண்டு செல்ல உதவுகின்றன.

இரத்தப் புற்றுநோயின் வகைகளும் சிகிச்சை முறைகளும்!

புற்றுநோயில் மொத்தம் 200 வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை செய்யப்படும். புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால், சரிசெய்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்தப் பதிவில் இரத்தப் புற்றுநோய் குறித்துப் பார்ப்போம்.

இரத்தப்புற்று நோய் எலும்பினுடைய மஜ்ஜையிலிருந்தே தோன்றுகிறது. ஏனெனில், அங்கிருந்து தன் இரத்த அணுக்கள் தோன்றுகிறது. இங்கிருந்து உருவாகும் மாறுப்பட்ட இரத்த அணுக்கள், சாதாரண இரத்த அணுக்களின் வேலைகளை உடலில் செய்யவிடாமல் தடுக்கிறது. இரத்தப் புற்றுநோயில் மூன்று வகையிருக்கிறது. leukaemia, lymphoma, Myeloma ஆகியவையாகும். Leukaemia என்பது இரத்தத்தையும், எலும்பு மஜ்ஜைகளையும் வெகுவாக பாதிக்கிறது. Lymphoma என்பது ஒருவருடைய நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது. Myeloma என்பது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களை வெகுவாக பாதிக்கிறது.

சில வகை இரத்தப்புற்று நோய் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தைகளுக்கான மற்றும் பெரியவர்களுக்கான சிகிச்சை முறைகள் வேறுபட்டிருக்கும். அக்யூட் லிம்போப்லஸ்டிக் லுக்கிமியா என்பது குழந்தைகளிடம் பரவலாக வரக்கூடியது. குரோனிக் லிம்போசைட்டிக் லுக்கிமியா என்பது பெரியவர்களுக்கு வரக்கூடியது.

இரத்தப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் எடை குறைதல், கட்டிகள் உருவாவது, மூச்சுத் திணறல், வியர்த்தல், களைப்பு, ஜுரம் ஆகியவையாகும். இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த chemo theraphy, targeted therapies, immuno theraphy, radio theraphy, stem cell transplants போன்ற தெரப்பிகள் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிந்துவிட்டால், ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது. இரத்தப் புற்றுநோய் வந்துவிட்டால் உடனேயே இறப்பு என்று அர்த்தமில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடக்கூடும். இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் டெக்னாலஜியின் வளர்ச்சியின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்வதோடு புற்றுநோயையும் குணப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தப் புற்றுநோய் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக உருவாவதால், அதனை நாம் வரும் முன்னரே தடுத்துவிட முடியாது. அதேசமயம், சில வேதிப்பொருட்கள் அல்லது கதிரியக்கங்களில் அதிகளவு உட்படும்போது இரத்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆகையால், அவற்றிலிருந்து தள்ளியிருப்பது சிறந்தது.

எனவே, இரத்தப்புற்றுநோய் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது. ஆரம்பக் காலத்திலேயே இரத்தப்புற்றுநோயை கண்டுப்பிடிப்பதன் மூலம் அதை குணமாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

மதிய உணவுக்கு முன் 3 பூண்டு பற்களை உண்பதால் கிடைக்கும் 10 நன்மைகள் தெரியுமா?

தினசரி நாம் சாப்பிடும் உணவில் பூண்டு சேர்த்து உண்பதால் உணவுக்கு மணமும் சுவையும் கிடைப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இதிலுள்ள மருத்துவ குணங்களின் பயன் அறிந்து, பூண்டை உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் தங்கள் உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும்போது அதிக நன்மைகள் கிடைக்கும். தினசரி மதிய உணவுக்கு முன் மூன்று பூண்டுப் பற்களை பச்சையாக உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பூண்டு இதயத்துக்கு இதம் தரும் ஓர் அற்புத உணவு. இதை தினசரி உட்கொண்டு வந்தால் இதய நோய் வரும் அபாயம் குறையும். இதிலுள்ள சல்ஃபர் என்ற கூட்டுப் பொருள் தேவைக்கு அதிகமான உடல் கொழுப்பின் அளவையும் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையச் செய்து இதயத்தைக் காக்கும்.

2. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீரேடிகல்களை எதிர்த்துப் போராடி, கேன்சர் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

3. பூண்டு ஒரு இயற்கை முறை ஆன்டிபயாடிக். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது பலவித தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவாக்க உதவும்.

4. பூண்டை தினசரி உட்கொண்டு வந்தால் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்கள் வருவதைத் தடுத்து நிறுத்தலாம்.

5. ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி பூண்டு உட்கொண்டால், பூண்டிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது அவர்களின் வலியை குறையச் செய்யும். மேலும், அந்த நோயுடன் சம்பந்தப்பட்ட மற்ற அசௌகரியங்களும் குறைய உதவும்.

6. பூண்டு செரிமானத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க உதவி புரியும். மேலும், ஜீரண மண்டல உறுப்புகளில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி புரியும். இதனால் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்படுவது சாத்தியமாகும்.

7. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கத் தேவைப்படும் வைட்டமின்களும் மினரல்களும் பூண்டில் அதிகளவு நிறைந்துள்ளன. மதிய உணவுக்கு முன் பூண்டுப் பற்கள் சாப்பிடுவதால், உடலிலுள்ள நோய்கள் விரைவில் குணமாகும். தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவுவதும் தடுக்கப்படும்.

8. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பிற்குள் இருக்கும் கனிமச் சத்துக்களை அதிகரிக்கச் செய்து எலும்புகள் வலுவடைய உதவும். இதனால் ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

9. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் சருமத்திலுள்ள கறைகளை நீக்கவும், சருமம் பளபளப்பு பெறவும் உதவும்.

10. பூண்டு மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவி புரிந்து அதிகமாக உள்ள கொழுப்பை கரையச் செய்யும். இதனால் உடல் எடை அதிகமாகாமல் பராமரிக்கலாம். இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் பூண்டு உதவும்.

இத்தனை நன்மை தரும் பூண்டினை அனைவரும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நலம் பெறுவோம்.

அகத்தியர்‌ ஞான சரநூல்‌ சு. எண்‌. 1879 – சரவித்தை – 10

உமையவளுக்குச்‌ சங்கரனார்‌ திருவுளம்‌ வைத்தியம்‌ செய்பவர்‌ போகும்‌ போது காயம்‌, படுகுறி சொல்வது. பிரதிவிக்கு முதுகு, அப்புவுக்குக்‌ கால்‌, அக்கினிக்கு மார்பி, வாய்வுக்குக்‌ கை, ஆகாயத்துக்குத்‌ தலை. இப்படி ஐந்து பூதமும்‌ நிற்பதை அறிந்து செல்லவும்‌. கெட்டவனுக்கு இன்னவிடத்தில்‌ காயம்‌ படுமென்றும்‌ கூறலாம்‌. இவற்றிற்கு மேல்‌ பிரதானம்‌ சந்திரனுக்கு இடப்புறம்‌ என்றும்‌, சூரியனுக்கு வலப்புறம்‌ என்றும்‌, ஆகாயத்துக்குப்‌ படுவான்‌ என்றும்‌ சொல்லலாம்‌.

யாரொருவன்‌ கெட்டவனெனக்‌ குறிப்பறிதல்‌
ஒருவன்‌ கெட்டவன்‌ என்றும்‌, நஞ்சுத்‌ தின்றான்‌ என்றும்‌, சொன்னபடி நடந்தால்‌ சூனியமாகில்‌ பலிக்கும்‌. பூரணமாகில்‌ பலிக்காது.

பஞ்ச பூதங்கள்‌ இயங்கும்‌ வகையறியும்‌ முறை
பிரதிவியோடும்‌ போது மூக்குத்‌ தண்டைத்‌ தட்டியோடும்‌, தேய்வு ஒடும்‌ போது மேல்‌ விழும்பைத்‌ தட்டியோடும்‌, வாய்வு ஒடும்‌ போது பக்கத்து விழும்பைத்‌ தட்டி ஓடும்‌. ஆகாசம்‌ ஓடும்‌ போது ஒன்றிலும்‌ தட்டாமல்‌ ஓடும்‌ என அறியலாம்‌.

பஞ்ச பூத நிறமறிதல்‌
பிரதிவி – பொன்‌ நிறம்‌. இதன்‌ கோணம்‌ நான்குச்‌ சதுரம்‌. நீளம்‌ 12 விரல்‌ கடையோடும்‌.
அப்புவு – வெண்மை நிறம்‌. பிறை போலிருக்கும்‌. துவர்ப்புண்டு. இதன்‌ நீளம்‌ 16 விரல்‌ கடையோடும்‌. அக்கினி – சிவப்பு நிறம்‌. முக்கோண வடிவம்‌. காரத்தன்மை உடையது. 8 விரல்‌ கடையோடும்‌. வாய்வு – நீல நிறம்‌. புளிப்புத்‌ தன்மையுடையது.
அறுகோண வடிவம்‌. 6 விரல்‌ கடையோடும்‌. ஆகாசம்‌ – புகை நிறம்‌. வட்ட வடிவம்‌. நாரதமில்லை. ஒரு விரல்‌ கடையோடும்‌. அப்படி ஐந்து பிரதானமும்‌ இயங்கும்‌ என
அறியவும்‌. இதில்‌ பிரதிவியின்‌ நிறம்‌ நல்லது. அக்கினி, வாய்வு ஆகாசமும்‌ தீதாகும்‌.

ஆண்‌, பெண்‌ கொண்ட பிணி தீருமோ?, தீராதோ?
என்று ஆண்‌ கொண்ட பிணிக்கு ஆண்‌ வந்து ஆண்களிடத்தில்‌ கேட்டால்‌ தீருமெனவும்‌, பெண்‌ கொண்ட பிணிக்குப்‌ பெண்‌ வந்து பெண்ணிடத்தில்‌ கேட்டால்‌ தீரும்‌ என்றும்‌, இவை
இயங்கும்‌, இயங்காத திசையில்‌ வந்து நின்றால்‌ நடந்தாலும்‌, கிடந்தாலும்‌ பெண்‌ கேட்டப்‌ பிணிக்கு ஆண்திசை இயங்குகின்ற திசையில்‌ பெண்‌ வந்து நின்றால்‌ சிறிது நாட்கள்‌
சென்று தீரும்‌ எனவும்‌, ஆரம்பத்தில்‌ பெண்‌ திசையில்‌ வந்த ஆணுக்கு முன்போல்‌ சொல்லவும்‌. இதுக்குப்‌ பெண்ணுக்குப்‌ பெண்ணிடத்திலும்‌, ஆணுக்கு ஆணிடத்திலும்‌ சுத்தாங்கமாகத்‌ தீரும்‌.

பிள்ளை நிறமறிதல்‌
ஐந்து பூதமும்‌ இயங்குவது அறிந்து பூபோகம்‌ செய்யும்‌ போது எந்தப்‌ பூதம்‌ இயங்குமோ, அந்தப்‌ பூதநிறமே கர்ப்ப காலத்தில்‌ விந்து தரிக்கும்‌. அந்தப்‌ பிள்ளைக்கு மந்த நிறம்‌
அந்தக்‌ குணமே உண்டாகுமென அறியவும்‌.

பிணி கொண்ட பேருக்குப்‌ பஞ்ச பூதம்‌
இயங்கும்‌ குறிப்பறிதல்‌ பிரதிவிக்கு நாள்‌ சென்று தீரும்‌. அப்புக்குச்‌ சீக்கீரமாகத்‌
தீரும்‌. தேயுவுக்கு மூன்று நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மூன்று நாட்களில்‌ மரணம்‌. வாய்வாகில்‌ இரண்டு நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மரணம்‌ ஆகாசமாகில்‌ ஏழு நாட்களில்‌ மரணம்‌. உபயமானால்‌ ஐந்து நாட்களில்‌ மரணம்‌. இது தப்பினால்‌
மரணமில்லை என்று கேட்ட பேருக்கு வந்தறிந்து சொல்லவும்‌.

கர்ப்ப சோதனை
கற்பம்‌ ஆணோ ?, பெண்ணோ ?- என்று கேட்டால்‌ கேட்பவருக்கு இயங்கும்‌ திசையாகில்‌ பிள்ளையில்லை எனலாம்‌. இதில்‌ சிதறி ஓடினால்‌ பிறந்தழியும்‌ எனலாம்‌. சந்திரன்‌ என்றால்‌ பெண்‌, சூரியன்‌ என்றால்‌ ஆண்‌ என்று சொல்லவும்‌. பிறந்த பிள்ளை பிழைக்குமா ? என்று கேட்டால்‌, பிள்ளைப்‌ பிறந்த செய்தி யாரொருவன்‌ வந்து கேட்கின்றானோ ? ஆண்‌, பெண்‌ பிறந்த செய்தியறிந்து ஆணுக்குச்‌ சூரியனும்‌, பெண்ணுக்குச்‌ சந்திரனும்‌ இயங்கும்‌ போது ஸ்ரீ போகம்‌ செய்யவேண்டும்‌. இதில்‌ ஆணுக்குச்‌ சூரியனோடினால்‌ ஆண்‌ என்றும்‌, சந்திரன்‌ ஓடினால்‌ பெண்‌ என்றும்‌ சொல்லவும்‌.

விசமறிதல்‌
_ விசமுண்டோ இல்லையோ ?என்றால்‌ சூரியனாகில்‌ விசம்‌ என்றும்‌, சந்திரனாகில்‌ விசம்‌ தீராது என்றும்‌, இயங்கும்‌ திசையில்‌ வந்து இயங்காத்‌ திசையில்‌ வந்து கேட்டால்‌ விசம்‌ கடினம்‌ என்றும்‌ அறிந்து கூறவும்‌.

சர இயக்கம்‌ அறிதல்‌
வெள்ளி, திங்கள்‌, புதன்‌ மூன்று நாட்களிலும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கு அமரபட்சம்‌, பூர்வபட்சம்‌ இரண்டிலும்‌ இயங்கும்‌ வகையறிதல்‌ அமரபட்சத்தில்‌ சூரியன்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்தில்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்காவிட்டால்‌ சரீரத்துக்குப்‌ பயமும்‌, வியாதியும்‌ உண்டாகும்‌. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்குச்‌ சந்திரனும்‌, திங்களுக்குச்‌ சூரியனும்‌ ஓடினால்‌ பயமுண்டாகும்‌. இதன்படி ஏழு வாரமும்‌ மாறி ஒடினால்‌ மரணமுண்டாகும்‌. இவ்வாறு இல்லாமல்‌ ஞாயிற்றுக்குச்‌ சூரியனும்‌, திங்களுக்குச்‌ சந்திரனும்‌ ஓடினால்‌ மிகவும்‌ நல்லது. இப்படி ஏழு நாட்களும்‌ தவறாமல்‌ ஓடினால்‌ ஆயுசுக்‌ கூடும்‌. நல்ல சிவயோகி சிவ ஞானியாக இருப்பான்‌ என்று அறியவும்‌.

சரம்‌ பார்த்து கிரிகை அறிதல்‌
சந்திரன்‌ வீடாக இருந்து போசனம்‌ செய்தால்‌ உணவானது துவத்தல்‌, காரத்தன்மையிலும்‌ இருக்கும்‌. சூரிய வீடாக இருந்தால்‌ உணவானது நெய்‌, பால்‌, புளி, கரிப்பு முதலானவற்றை விட்டு விடவும்‌. இப்படி சாப்பிடும்‌ முன்‌ முதலில்‌ தண்ணீர்‌ குடிக்காமல்‌ பாதி வயிற்றுக்குச்‌ சாதமும்‌, கால்‌ வயிற்றுக்குத்‌ தண்ணீரும்‌, கால்‌ வயிற்றுக்கு வாயுப்‌ பட்சணமும்‌ மாறியோடும்‌ போது இடக்கைக்‌ கீழும்‌ படுத்திருந்து சரீர சுத்தி செய்து கொண்டு ஒட்டியாணமும்‌ தரித்துக்கொண்டு சரம்‌ பார்த்தால்‌ சிதறாமல்‌ ஓடும்‌. இப்படி நான்கு வகைக்‌ காலமும்‌ சிதறாமல்‌ ஓடும்‌.

வயதை அறிதல்‌
ஒவ்வொரு கலையிலும்‌ ஐந்து நாழிகைச்‌ சரம்‌ இயங்கும்‌. இதில்‌ ஒரு நாழிகைக்‌ குறைந்தாலும்‌ இருபது வயது குறையும்‌. ச–6

இதுமட்டும்‌ அல்லாமல்‌ சரம்‌ உதிக்கும்‌ போது ஸ்ரீபோகம்‌ செய்தால்‌ அந்த வேளையில்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌. பிள்ளைக்கு வயது குறையாது என்று அறியவும்‌. கெடுதி வருமோ ? வராதோ? என்றால்‌ சந்திரன்‌ எனில்‌ வரும்‌. சூரியன்‌ எனில்‌ வராது. சந்திரனில்‌ இருந்து ஓடினால்‌ கொஞ்சம்‌ வந்து போகும்‌. அடைப்பட்டால்‌ வராது எனவும்‌ அறியலாம்‌.
பக்கம்‌ பதினைந்திற்கும்‌ காலம்‌ அறிதல்‌ அமரபட்சம்‌ சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதமை முதல்‌ பதினைந்து நாளும்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌.

பூர்வபட்சம்‌
சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதிமை முதல்‌ காலம்‌ பதினைந்து நாட்களும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்கினால்‌ வியாதியும்‌, கேடும்‌ விளையும்‌. மழை நாளிலும்‌
அகப்படுவர்‌ எனவும்‌ அறியலாம்‌.

பஞ்சபூதம்‌ சந்திரன்‌ சூரியனில்‌ இயங்கும்‌ வகையறிதல்‌
பிரதிவிக்கு 1 1/, நாழிகை (நிமிடம்‌)
அப்புவுக்கு 1 1/, நாழிகை மிடம்‌)
தேய்வுக்கு 1 நாழிகை இமிடம்‌)
வாய்வுக்கு 1 5/, நாழிகை மிடம்‌
ஆகாசத்துக்கு 1 நாழிகை மிடம்‌
ஆக நாழிகையின்‌ படி பிரதானத்தில்‌ ஐந்து நாழிகையாகச்‌ சந்திரன்‌ கலையில்‌ மூன்று மூன்று பிரகாரமாகப்‌ பிரவேசிக்கும்‌.
பகலில்‌ 6 பிரகாரமும்‌, இரவில்‌ 6 பிரகாரமும்‌ ஓடும்‌. இவ்வாறு இரவுபகலாக 12 பிரகாரமும்‌ ஓடுவதற்கு ஐந்து நாழிகைக்கு ஒர்‌ இராசியாகப்‌ பனிரெண்டு இராசியிலும்‌
பனிரெண்டு இராசியும்‌ பனிரெண்டு பிரகாரம்‌ ஒடும்‌. ஆக இரவுபகலாகக்‌ கணக்கிட்டு 60 நாழிகையும்‌ வெற்றி, தோல்விக்‌ கணக்கிட்டுக்‌ கூறமுடியும்‌. வெல்வது யாரென்று கேட்டு
வருபவர்களுக்கு இருவர்‌ பேரின்‌ எழுத்தைக்‌ கணக்கிட்டுக்‌ கொண்டு, குறைந்த எழுத்துப்‌ போக உயர்ந்த எழுத்தை உடையவன்‌ வெல்வான்‌ என்று கூறமுடியும்‌.

நாளுக்கு ராசி இயங்கும்‌ விதம்‌
மேசம்‌ – 41, நாழிகை, ரிசபம்‌ – 4 1/, நாழிகை, மிதுனம்‌ – 5 1, நாழிகை, கற்கடகம்‌ — 5 1/, நாழிகை, சிம்மம்‌ – 5 17, நாழிகை, கன்னி – 5 நாழிகை, துலாம்‌ – 5 நாழிகை, விருச்சிகம்‌ – 5 1,
நாழிகை, தனுசு – 5 1, நாழிகை, மகரம்‌ – 5 7, நாழிகை, கும்பம்‌ 44, நாழிகை, மீனம்‌ – 4 17, நாழிகை, இராபகம்‌ 50 நாழிகையும்‌ சரியாக இயங்கும்‌ என்று அறியவேண்டும்‌.

யாத்திரை வேளை அறியும்‌ முறை
செவ்வாய்‌, வெள்ளி – காலமே இரசித வேளை. ஞாயிறு, புதன்‌, சனி – இம்‌ மூன்று நாட்களும்‌ தாமித காலம்‌. திங்கள்‌, வியாழன்‌ – இரண்டு நாட்களும்‌ சாந்தமான வேளை.
மற்ற நாட்களும்‌, நாழிகையும்‌ சாந்தமான வேளை. இப்படி மாறிமாறி வரும்‌ என்பதை அறியவேண்டும்‌. ஓருவன்‌ எங்கே என்று கேட்பவர்கள்‌ வந்தால்‌ பிரதிவியாகில்‌ வீற்றிருப்பான்‌.

அப்புவாகில்‌ முற்றத்தில்‌ இருப்பான்‌.
தேயுவாகில்‌ வருவான்‌.
வாயுவாகில்‌ வீற்றிருப்பான்‌.
ஆகாயமாகில்‌ மலை கடலுக்கு அப்பால்‌ இருப்பான்‌.

வருவானோ ? வரமாட்டானோ ? என்று கேட்பவர்களுக்கு
பிரதிவியாகில்‌ நிற்கிறான்‌. அப்புவாகில்‌ மீண்டும்‌ வருவான்‌. தேயுவாகில்‌ வழிப்‌ புறப்பட்டான்‌. வாயுவாகில்‌ ஊரில்‌ இருப்பான்‌. ஆகாயமாகில்‌ ஒரு நாழிகைக்குள்ளே
வருவானென்று சொல்லவும்‌.

மூவகை இராசியை அறியும்‌ முறை
சூரியன்‌ – சரராசி, சந்திரன்‌ – இராசியின்‌ இருபுறமும்‌ ஒடும்‌. அக்கினி – உபயராசி என்பதாகும்‌. பஞ்ச பூதங்களும்‌ இயங்கும்‌ விதம்‌ பிரதிவி பிரதிவி இயங்கும்‌ போது கோவில்‌ கட்ட, பிரதிட்டை செய்ய, வீடுப்புக, ஆபரணம்‌ வாங்க, பட்டம்‌ கட்ட, முடிச்‌ சூட்ட
முதலான காரியம்‌ மேற்கொள்ளவும்‌ மாமரம்‌ வைக்கவும்‌ நன்றாகும்‌.

அப்பு
அப்பு இயங்கும்‌ போது மலரி, வாவி, குளம்‌, கிணறு, சோலை, யாத்திரை, உழுதல்‌, கவி உரைக்க, மணம்‌ செய்ய மிகவும்‌ நன்றாகும்‌.

தேயு
கொடியது செய்ய, பிணி தீர்க்க நன்று. வாய்வு ஆனை, குதிரை தேரேறுதல்‌ நன்று.

ஆகாயம்‌
அமைதியாக இருப்பது நன்று. இப்படி ஐந்து பிரதானமும்‌’ இயங்கும்‌ வழியறிந்து செய்யவும்‌.

சரம்‌ இயங்குவதை அறிதல்‌
ஆராதாரத்தை ஊடுருவினால்‌ பிராண நாடியில்‌ நாளொன்றுக்கு வாசி 21600 சுவாசமோடும்‌. இதில்‌ 16400 சுவாசம்‌ உள்ளேயும்‌, இதில்‌ 7200 சுவாசம்‌ வெளியேயும்‌ இயங்கும்‌. 16100 சுவாசம்‌ சரீரத்தில்‌ நின்று உபத்திரம்‌ செய்து 12 அங்குலம்‌ மாறுப்பட்டு 4 அங்குலம்‌ புறம்பாகப்‌ போகும்‌.

வாரப்‌ பலன்‌ அறிதல்‌
ஞாயிறு தப்பில்‌ வியாதி திங்கள்‌ தப்பில்‌ வலி, போக்குண்டாகும்‌. செவ்வாய்த்‌ தப்பில்‌ சாவு நிகழும்‌. புதன்‌ தப்பில்‌ கலகம்‌ வியாழன்‌ தப்பில்‌ இராசாவுக்குத்‌ துன்பம்‌. வெள்ளி தப்பில்‌ ஊர்‌ விட்டுப்‌ போகும்‌ நிலை ஏற்படும்‌. சனி தப்பில்‌ பஞ்சம்‌ உண்டாகும்‌. ஒரு காரியம்‌ பொய்யா அல்லது உண்மையா என அறிதல்‌ சந்திரன்‌ என்றால்‌ பொய்‌, சூரியன்‌ என்றால்‌ மெய்‌ என்று அறியவும்‌.

காலமறிதல்‌
சூரியன்‌ ஒரு நாள்‌ ஓடினால்‌ மூன்று வருடத்தில்‌ மரணம்‌. இருபுறத்திலும்‌ மாறாமல்‌ பத்து நாழிகை இரவும்‌ பகலும்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. மூன்று நாட்கள்‌ ஒரே பக்கமாக ஒடினால்‌ ஒரு வருடத்தில்‌ மரணம்‌, வாயினால்‌ ஓடினால்‌ இரண்டு நாட்களில்‌ மரணம்‌. எக்காலமும்‌ இரவு முப்பதும்‌ சந்திரனிலும்‌ இயங்கினால்‌, பகல்‌ முப்பதும்‌ சூரியனிலும்‌ மாறாமல்‌ இயங்கினால்‌ நல்ல சிவயோகியாவான்‌. ஒரு புறத்தில்‌ ஆறு
நாட்கள்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌, பத்து நாள்‌ ஓடினால்‌ முப்பத்து இரணடு நாளில்‌ மரணம்‌.

சூரிய தரிசனம்‌
காற்று அடிக்காத போது மதியத்தில்‌ சூரியனை நோக்கிப்‌ பார்த்து நிலத்திலே குழிவெட்டி குழியில்‌ உமிழ்ந்து அதைப்‌ பார்த்தால்‌ “பஞ்ச வர்ணம்‌” – தோன்றி வில்‌ போல்‌ கண்டால்‌ வியாதியும்‌ சாவும்‌ அவ்வாண்டிலிருந்து மூன்று வருடத்திற்கும்‌ இல்லை. முறிந்து வில்லாய்‌ தோன்றினால்‌ பத்தாண்டில்‌ சாவு. அந்த முறிந்த வில்லில்‌ ஒரு பெண்‌ சொரூபம்‌ தோன்றினால்‌ ஆறாம்‌ பிறையில்‌ சாவு உண்டாகும்‌.

சந்திர தரிசனம்‌
பூர்ண சந்திரனில்‌ காற்றடிக்காத வேளையில்‌ செப்பு சட்டியில்‌ பசுவின்‌ நெய்‌ விட்டு அதனுள்‌ சந்திரனைப்‌ பார்த்தால்‌ சாதாரணமாகத்‌ தெரிந்தால்‌ ஆயுசு உண்டு. சிவப்பாகில்‌ வாழ்வு உண்டு. பச்சையாகில்‌ வியாதியுண்டு. பொன்‌ நிறமாக இருந்தால்‌ கேடு உண்டு. கறுப்பாகில்‌ சாவு உண்டு. இதுபோல்‌ இன்னொரு முறையும்‌ உண்டு. மதியும்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. வடக்கு, தெற்கு மதியானத்தில்‌ குறைந்தால்‌ மூன்று பிறையில்‌ மரணம்‌. தெற்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. கிழக்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ இரண்டு பிறையில்‌ மரணம்‌. நடுவில்‌ குறைந்து பள்ளமாக இருந்தால்‌ ஒரு பிறையில்‌ மரணம்‌., சர சாத்திரம்‌ உச்சித்‌ துடிக்கும்‌ போது அவ்வாண்டில்‌ மரணம்‌. கண்டம்‌ துடிக்கும்‌ போது இரண்டாண்டில்‌ மரணம்‌.

புயந்துடிக்கும்‌ போது ஆறு திங்களில்‌ மரணம்‌. கன்னம்‌ விடாமல்‌ துடிக்கும்‌ போது மூன்று திங்களில்‌ மரணம்‌. இடக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது தூரத்திலிருந்து வருவார்‌. வலக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது விருந்து வரும்‌. உருத்‌ தெரியாமல்‌ கண்ணொளி மயங்கில்‌ மூன்று நாளில்‌ மரணம்‌.

கனவின்‌ குறி
தென்திசையிலிருந்து இரதம்‌ வரக்‌ கண்டால்‌ மூன்றாண்டில்‌ மரணம்‌. அருந்ததி தெரியாமல்‌ இருந்தாலும்‌, தன்‌ மூக்கின்‌ முனைத்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌.

இதழ்‌ நாக்கிற்கு இடப்புறம்‌ எரிச்சல்‌ கண்டால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. உதடு, நாக்கு, பல்‌, தாது இவை கருத்துப்போனால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌.

சிறுத்த இடைப்‌ பருத்து, மார்பும்‌ பருத்தால்‌ சிறிது நாட்களில்‌ மரணம்‌. தண்ணீர்‌, கண்ணாடி, நெய்‌ இதில்‌ தன்‌ சிரசு தெரியாமல்‌ இருந்தால்‌ சிற்சில நாளில்‌ மரணம்‌. மகுடம்‌ கையினால்‌ செவியை மூடி வாக்கியங்கள்‌ உரைத்தாலும்‌ கேட்காமல்‌ இருந்தாலும்‌, பருத்த உடல்‌ சிறுத்தாலும்‌ ஒரு மாதத்தில்‌ மரணம்‌ அடைவான்‌. தன்‌ நிழல்‌
தெற்குச்‌ சாய்ந்தாலும்‌, தன்‌ நிழல்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலமான 48நாட்களில்‌ மரணம்‌.

குருபுத்திரனுக்குச்‌ சித்தியாவும்‌ கனவின்‌ குறி
பேய்‌, பூதம்‌, இராட்சதர்‌, கருங்காகம்‌, குரங்கு, புலி, கரடி, செந்நாய்‌ இவை கனவில்‌ தினசரி வந்தால்‌ நல்ல பக்குவமான 60, 70, 80 தில்‌ மரணம்‌. எண்ணெய்த்‌ தேய்க்கவும்‌, முடிக்‌ கத்தரிக்கவும்‌, தென்‌ திசையிலிருந்து ஒருவன்‌ ஓலைக்‌ கொண்டு வந்து அழைத்துப்‌ போகக்‌ கண்டால்‌ ஒரு திங்களில்‌ மரணம்‌.

கல்யாணம்‌ செய்யவும்‌, கருமேனி உடையவனாகவும்‌, கருங்காவி, தடி வைத்திருத்தல்‌, கரம்‌ கூப்பிட, தலையில்‌ முண்டாசுக்‌ கட்டியிருத்தாலும்‌ இவர்கள்‌ யாரேனும்‌ வந்து
அழைத்தால்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌ உண்டாகும்‌.

கைக்கொண்டு தன்‌ தலையில்‌ கைவைத்து ஒருவர்‌ பேசுவதைக்‌ கேட்காமல்‌ போனால்‌ அந்த மாதத்தில்‌ மரணம்‌.

வாரப்பலன்‌
திங்கள்‌, புதன்‌, வெள்ளி ஆகிய மூன்று நாளும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. சனி, செவ்வாய்‌, ஞாயிறு ஆகிய மூன்று நாளும்‌ காலையில்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கும்‌, பூர்வ பட்சத்திற்கும்‌, அமரபட்சத்திற்கும்‌ சந்திரன்‌ சூரியன்‌ இரண்டிலும்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌. அமரபட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌.

உ – குருவே துணைஹரி ஓம்‌ நன்றாக வாழ்ககுரு மொழி விவரம்‌ ? – சரவித்தை – 9

பரமேசுவரரைத்‌ திருமுகம்‌ நோக்கிப்‌ பார்வதியம்மன்‌ கேட்கும்‌ விதம்‌
சுவாமி வாக்கினாலே நான்கு வேதம்‌, ஆறு சாத்திரம்‌, பதினெண்‌ புராணம்‌, பஞ்சாங்கம்‌ மற்ற பல சாத்திரத்தினால்‌ விவரித்து சொல்லாமல்‌ நினைத்தப்படி ஒரு காரியம்‌ சொல்ல
சாத்திரம்‌ உண்டோ ? என்று பரமேசுவரரைப்‌ பார்த்துப்‌ பார்வதி கேட்க, பரமேசுவரர்‌ திருவாய்மொழிந்து சொல்லுதல்‌.

கேள்‌ பெண்ணே ! பரம இரகசியமான சர சாத்திரம்‌ உண்டு. அந்தச்‌ சாத்திரம்‌ நினைத்தபோது சகல காரியமும்‌ சொல்லலாம்‌. அந்தச்‌ சாத்திரத்தைச்‌ சொல்கிறேன்‌ கேள்‌. சரம்‌ பார்ப்பது சிவத்‌ தியானம்‌ இடைவிடாமல்‌ குரு பாதத்தில்‌ நினைவையும்‌, மனத்தையும்‌ வைத்துச்‌ சர நிலையறிந்து பார்த்தால்‌ இடகலையாவது, இடது புறமாகும்‌. இது சந்திரன்‌. இது பெண்‌. இது அமிர்தம்‌. இதன்‌ நிறம்‌ கறுப்பு. இதன்‌ இராசி திரராசி என்றும்‌ பேராகும்‌.

பின்‌ கலையாவது வலப்புறம்‌. அதன்‌ குறியன்‌ ஆண்‌. இதன்‌ நிறம்‌ வெள்ளை. இது சரராசிஎன்று பேராகும்‌. உபயம்‌ இரண்டிலும்‌ ஓடுகிறது. சுழிமுனை என்பர்‌. இது அக்கினி. நிறம்‌ சிவப்பு, இதனை உபயராசி என்று அறியவும்‌. சுழிமுனை அறிதல்‌ சுழிமுனையாவது இடகலைக்கும்‌, பின்‌ கலைக்கும்‌ நடுவே நிற்கும்‌. இது மூலநாடி என்றும்‌, இது பிராணவாயு மூலாதாரம்‌ தொடங்கி, பிரமாந்திரம்‌ மட்டும்‌ ஊடுருவி, அஞ்சுரு வாணி போல்‌ இயங்கும்‌. எழுபத்தாறாயிரம்‌ நாடி நரம்பிலும்‌ 96 தத்துவத்திலும்‌ தட்டாமல்‌ சூட்சாதி சூட்சமாய்‌ இயங்கும்‌.

மனம்‌, நினைவு அறிவினால்‌ குருவருளைப்‌ பற்றி அறியவேண்டும்‌. இவற்றுக்கெல்லாம்‌ ரேசகமான வாயுவை விடுவதாகும்‌. பூரகமாவது வாயுவை உள்ளே வாங்குவதாகும்‌. கும்பகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ உள்ளே நிறுத்துவதாகும்‌. தடாகமாவது வாயுவைப்‌ பரிபூரணத்தில்‌ அறிவினால்‌ சமதானம்‌ செய்வதாகும்‌.

இந்த நான்கு வகைப்‌ பிரமாணம்‌ சதிராய்‌ கைவந்த சிவஞான யோகிகளுக்குத்‌ தெரிவதோடு அல்லாமல்‌ மற்ற தேவர்கள்‌, மானிடர்களாலேயும்‌ விளக்கமுடியாது. அந்தப்‌
பரப்பிரம்ம மார்க்க சிவத்தின்‌ விவரம்‌ சொல்லக்‌ கேள்‌.

சந்திர பலன்‌
சந்திரன்‌ பலன்‌ உதயமாகையில்‌ ஆடை உடுக்கவும்‌, ஆபரணம்‌ தரிக்கவும்‌, விவாகம்‌ செய்யவும்‌, அடிமைக்‌ கொள்ளவும்‌, கிணறு வெட்டவும்‌, மனை கட்டவும்‌ குடிபுகுவதும்‌,
வித்துக்‌ கட்டவும்‌, வேலை செய்யவும்‌, மன்னரைக்‌ காணவும்‌, உண்மை சொல்லவும்‌, சாந்தி பண்ணவும்‌, பிரதிஷ்டை செய்யவும்‌, சரம்‌ தவிர்க்கவும்‌, வெப்புத்‌ தீர்க்கவும்‌, வித்தைக்‌ கற்கவும்‌, தனம்‌ புதைக்கவும்‌, கடன்‌ கொடுக்கவும்‌ முதலானவை நன்மையான காரியம்‌ சந்திரனில்‌ செய்து முடிக்க வெற்றியாகும்‌.

சூரியபலன்‌
சூரியன்‌ உதயமாகும்போது, உபதேசம்‌ கேட்கவும்‌, கொடுக்கல்‌ வாங்கல்‌ செய்யவும்‌, படையெடுக்கவும்‌, பலிக்‌ கொடுக்கவும்‌, பண்ட பாத்திரங்கள்‌ செய்யவும்‌ – வாங்கவும்‌, சூதாடவும்‌, வழக்குத்‌ தொடுக்கவும்‌, கீதம்‌ பாடவும்‌ எழுதவும்‌, கரி பரியில்‌ ஏறவும்‌, தேன்கலந்த சொற்களைச்‌ சொல்லவும்‌, பகை முடிக்கவும்‌, பேய்‌ பிசாசு தீர்க்கவும்‌, மந்திரங்கள்‌ உச்சரிக்கவும்‌, மருந்துண்ணவும்‌, உறங்க, குளிக்க, குலவையிட அவை போன்ற கூறுகளைத்‌ தீர்க்கவும்‌, முப்போகம்‌ செய்யவும்‌, ஜலத்‌ தர்ப்பணம்‌ செய்யவும்‌, வெள்ளாமை செய்யவும்‌ நன்றாக அமையும்‌.

உபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌
உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.
ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌.

சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌ ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற
வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறிஉபயசரம்‌ இயங்கும்‌ பலன்‌ உபயசரமாவது, இரண்டு புறத்திலும்‌ இயங்குவதாகும்‌. இதில்‌ ஒரு காரியமும்‌ செய்யக்‌ கூடாது. சூனியகாலமாகத்‌ திகழும்‌. ஆகையால்‌ ஒன்றும்‌ செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.

ஒரு காரியம்‌ பலிக்குமோ, பலிக்காதோ என்றால்‌ சந்திரனில்‌ பலிக்கும்‌. சூரியனில்‌ பலிக்காது. சந்திரனில்‌ சிதறி ஓடினால்‌ நாள்‌ செல்லும்‌. சந்திரன்‌ அடைப்பட்டால்‌ பலிக்காது என்பதை அறியவேண்டும்‌.

சந்திரக்காலம்‌
யாத்திரை போவதற்குச்‌ சந்திரலுக்குக்‌ கிழக்கும்‌, வடக்கும்‌ போகக்‌ கூடாது. சூரியனுக்குத்‌ தெற்கும்‌ மேற்கும்‌ போகக்‌ கூடாது. அதனை மீறிப்‌ போகும்‌ போது பயமுண்டாகும்‌.
இதற்குச்‌ சந்திரன்‌ என்றால்‌ தெற்கில்‌ மேற்கில்‌ போகவும்‌. சூரியன்‌ என்றால்‌ கிழக்கும்‌ வடக்கும்‌ போகவும்‌. இது தவிர, அவசரமான காரியங்களுக்குப்‌ போக வேண்டுமானால்‌ சந்திரனில்‌ அந்தச்‌ சரமேற வாங்கி மூன்றடி முன்னே வைத்துப்‌ போகவும்‌. யாத்திரைப்‌ போகவும்‌, தீர்ப்புக்குப்‌ போகவும்‌ தெற்குப்‌ போகலாம்‌. சனிக்கும்‌, வியாழனுக்கும்‌
ஒடுகின்ற பாகத்தில்‌ கால்‌ முன்னால்‌ மூன்றடி வைத்துச்‌ சரம்‌ ஏற வாங்கித்‌ தெற்கே போகவும்‌.

சூரியக்‌ காலம்‌
திங்கள்‌, வெள்ளி காலங்களில்‌ பாகத்துக்‌ கால்‌ முன்பட நான்கு அடி வைத்துச்‌ சரமேற வாங்கி வடக்கே செல்லவும்‌. புதன்‌ செவ்வாய்க்கு முன்போன்று ஏற வாங்கி இரண்டடி வைத்துக்‌ கிழக்கே செல்லவும்‌.

போர்‌ புரிய சரம்‌ பார்த்தல்‌
சந்திரனில்‌ கச்சைக்‌ கட்டிச்‌ சூரியனில்‌ போருக்குப்‌ புறப்பட வெற்றியாகும்‌. இயங்கும்‌ திசையில்‌ தானின்று கொண்டு இயங்காத திசையில்‌ மற்றவனை நிறுத்தி வெட்ட வெல்லும்‌. மாறாக, இயங்கும்‌ திசையில்‌ நின்று வெட்டத்‌ தனக்கு வெட்டப்படும்‌ என அறியவும்‌. தான்‌ இயங்காத திசையில்‌ நின்று வெட்ட பக்கவெட்டுப்படும்‌.

வைத்தியம்‌ செய்யக்‌ குறி
வைத்தியம்‌ செய்பவர்‌ போகும்‌ போது காயம்‌, படுகுறி சொல்வது. பிரதிவிக்கு முதுகு, அப்புவுக்குக்‌ கால்‌, அக்கினிக்கு மார்பி, வாய்வுக்குக்‌ கை, ஆகாயத்துக்குத்‌ தலை. இப்படி ஐந்து பூதமும்‌ நிற்பதை அறிந்து செல்லவும்‌. கெட்டவனுக்கு இன்னவிடத்தில்‌ காயம்‌ படுமென்றும்‌ கூறலாம்‌. இவற்றிற்கு மேல்‌ பிரதானம்‌ சந்திரனுக்கு இடப்புறம்‌ என்றும்‌, சூரியனுக்கு வலப்புறம்‌ என்றும்‌, ஆகாயத்துக்குப்‌ படுவான்‌ என்றும்‌ சொல்லலாம்‌.

யாரொருவன்‌ கெட்டவனெனக்‌ குறிப்பறிதல்‌
ஒருவன்‌ கெட்டவன்‌ என்றும்‌, நஞ்சுத்‌ தின்றான்‌ என்றும்‌, சொன்னபடி நடந்தால்‌ சூனியமாகில்‌ பலிக்கும்‌. பூரணமாகில்‌ பலிக்காது. பஞ்ச பூதங்கள்‌ இயங்கும்‌ வகையறியும்‌ முறை பிரதிவியோடும்‌ போது மூக்குத்‌ தண்டைத்‌ தட்டியோடும்‌, தேய்வு ஒடும்‌ போது மேல்‌ விழும்பைத்‌ தட்டியோடும்‌, வாய்வு ஒடும்‌ போது பக்கத்து விழும்பைத்‌ தட்டி ஓடும்‌. ஆகாசம்‌ ஓடும்‌ போது ஒன்றிலும்‌ தட்டாமல்‌ ஓடும்‌ என அறியலாம்‌.

பஞ்ச பூத நிறமறிதல்‌
பிரதிவி – பொன்‌ நிறம்‌. இதன்‌ கோணம்‌ நான்குச்‌ சதுரம்‌. நீளம்‌ 12 விரல்‌ கடையோடும்‌.
அப்புவு – வெண்மை நிறம்‌. பிறை போலிருக்கும்‌. துவர்ப்புண்டு. இதன்‌ நீளம்‌ 16 விரல்‌ கடையோடும்‌.

அக்கினி – சிவப்பு நிறம்‌. முக்கோண வடிவம்‌.
காரத்தன்மை உடையது. 8 விரல்‌ கடையோடும்‌.
வாய்வு – நீல நிறம்‌. புளிப்புத்‌ தன்மையுடையது.
அறுகோண வடிவம்‌. 6 விரல்‌ கடையோடும்‌.
ஆகாசம்‌ – புகை நிறம்‌. வட்ட வடிவம்‌. நாரதமில்லை. ஒரு விரல்‌ கடையோடும்‌. அப்படி ஐந்து பிரதானமும்‌ இயங்கும்‌ என அறியவும்‌. இதில்‌ பிரதிவியின்‌ நிறம்‌ நல்லது. அக்கினி, வாய்வு ஆகாசமும்‌ தீதாகும்‌.

ஆண்‌, பெண்‌ கொண்ட பிணி தீருமோ?, தீராதோ?
என்று ஆண்‌ கொண்ட பிணிக்கு ஆண்‌ வந்து ஆண்களிடத்தில்‌ கேட்டால்‌ தீருமெனவும்‌, பெண்‌ கொண்ட பிணிக்குப்‌ பெண்‌ வந்து பெண்ணிடத்தில்‌ கேட்டால்‌ தீரும்‌ என்றும்‌, இவை
இயங்கும்‌, இயங்காத திசையில்‌ வந்து நின்றால்‌ நடந்தாலும்‌, கிடந்தாலும்‌ பெண்‌ கேட்டப்‌ பிணிக்கு ஆண்திசை இயங்குகின்ற திசையில்‌ பெண்‌ வந்து நின்றால்‌ சிறிது நாட்கள்‌
சென்று தீரும்‌ எனவும்‌, ஆரம்பத்தில்‌ பெண்‌ திசையில்‌ வந்த ஆணுக்கு
முன்போல்‌ சொல்லவும்‌. இதுக்குப்‌ பெண்ணுக்குப்‌ பெண்ணிடத்திலும்‌, ஆணுக்கு ஆணிடத்திலும்‌ சுத்தாங்கமாகத்‌ தீரும்‌.

பிள்ளை நிறமறிதல்‌
ஐந்து பூதமும்‌ இயங்குவது அறிந்து பூபோகம்‌ செய்யும்‌ போது எந்தப்‌ பூதம்‌ இயங்குமோ, அந்தப்‌ பூதநிறமே கர்ப்ப காலத்தில்‌ விந்து தரிக்கும்‌. அந்தப்‌ பிள்ளைக்கு மந்த நிறம்‌
அந்தக்‌ குணமே உண்டாகுமென அறியவும்‌.

பிணி கொண்ட பேருக்குப்‌ பஞ்ச பூதம்‌
இயங்கும்‌ குறிப்பறிதல்‌ பிரதிவிக்கு நாள்‌ சென்று தீரும்‌. அப்புக்குச்‌ சீக்கீரமாகத்‌
தீரும்‌. தேயுவுக்கு மூன்று நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மூன்று நாட்களில்‌ மரணம்‌. வாய்வாகில்‌ இரண்டு நாட்களில்‌ தீரும்‌. இதில்‌ மீறினால்‌ மரணம்‌ ஆகாசமாகில்‌ ஏழு நாட்களில்‌ மரணம்‌. உபயமானால்‌ ஐந்து நாட்களில்‌ மரணம்‌. இது தப்பினால்‌
மரணமில்லை என்று கேட்ட பேருக்கு வந்தறிந்து சொல்லவும்‌.

கர்ப்ப சோதனை
கற்பம்‌ ஆணோ ?, பெண்ணோ ?- என்று கேட்டால்‌ கேட்பவருக்கு இயங்கும்‌ திசையாகில்‌ பிள்ளையில்லை எனலாம்‌. இதில்‌ சிதறி ஓடினால்‌ பிறந்தழியும்‌ எனலாம்‌. சந்திரன்‌ என்றால்‌ பெண்‌, சூரியன்‌ என்றால்‌ ஆண்‌ என்று சொல்லவும்‌. பிறந்த பிள்ளை பிழைக்குமா ? என்று கேட்டால்‌, பிள்ளைப்‌ பிறந்த செய்தி யாரொருவன்‌ வந்து கேட்கின்றானோ ? ஆண்‌, பெண்‌ பிறந்த செய்தியறிந்து ஆணுக்குச்‌ சூரியனும்‌, பெண்ணுக்குச்‌ சந்திரனும்‌ இயங்கும்‌ போது ஸ்ரீ போகம்‌ செய்யவேண்டும்‌. இதில்‌ ஆணுக்குச்‌ சூரியனோடினால்‌ ஆண்‌ என்றும்‌, சந்திரன்‌ ஓடினால்‌ பெண்‌ என்றும்‌ சொல்லவும்‌.

விசமறிதல்‌
_ விசமுண்டோ இல்லையோ ?என்றால்‌ சூரியனாகில்‌ விசம்‌ என்றும்‌, சந்திரனாகில்‌ விசம்‌ தீராது என்றும்‌, இயங்கும்‌ திசையில்‌ வந்து இயங்காத்‌ திசையில்‌ வந்து கேட்டால்‌ விசம்‌ கடினம்‌ என்றும்‌ அறிந்து கூறவும்‌.

சர இயக்கம்‌ அறிதல்‌
வெள்ளி, திங்கள்‌, புதன்‌ மூன்று நாட்களிலும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கு அமரபட்சம்‌, பூர்வபட்சம்‌ இரண்டிலும்‌ இயங்கும்‌ வகையறிதல்‌ அமரபட்சத்தில்‌ சூரியன்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்தில்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்காவிட்டால்‌ சரீரத்துக்குப்‌ பயமும்‌, வியாதியும்‌ உண்டாகும்‌. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்குச்‌ சந்திரனும்‌, திங்களுக்குச்‌ சூரியனும்‌ ஓடினால்‌ பயமுண்டாகும்‌. இதன்படி ஏழு வாரமும்‌ மாறி ஒடினால்‌ மரணமுண்டாகும்‌. இவ்வாறு இல்லாமல்‌ ஞாயிற்றுக்குச்‌ சூரியனும்‌, திங்களுக்குச்‌ சந்திரனும்‌ ஓடினால்‌ மிகவும்‌ நல்லது. இப்படி ஏழு நாட்களும்‌ தவறாமல்‌ ஓடினால்‌ ஆயுசுக்‌ கூடும்‌. நல்ல சிவயோகி சிவ ஞானியாக இருப்பான்‌ என்று அறியவும்‌.

சரம்‌ பார்த்து கிரிகை அறிதல்‌
சந்திரன்‌ வீடாக இருந்து போசனம்‌ செய்தால்‌ உணவானது துவத்தல்‌, காரத்தன்மையிலும்‌ இருக்கும்‌. சூரிய வீடாக இருந்தால்‌ உணவானது நெய்‌, பால்‌, புளி, கரிப்பு முதலானவற்றை விட்டு விடவும்‌. இப்படி சாப்பிடும்‌ முன்‌ முதலில்‌ தண்ணீர்‌ குடிக்காமல்‌ பாதி வயிற்றுக்குச்‌ சாதமும்‌, கால்‌ வயிற்றுக்குத்‌ தண்ணீரும்‌, கால்‌ வயிற்றுக்கு வாயுப்‌ பட்சணமும்‌ மாறியோடும்‌ போது இடக்கைக்‌ கீழும்‌ படுத்திருந்து சரீர சுத்தி செய்து கொண்டு ஒட்டியாணமும்‌ தரித்துக்கொண்டு சரம்‌ பார்த்தால்‌ சிதறாமல்‌ ஓடும்‌. இப்படி நான்கு வகைக்‌ காலமும்‌ சிதறாமல்‌ ஓடும்‌.

வயதை அறிதல்‌
ஒவ்வொரு கலையிலும்‌ ஐந்து நாழிகைச்‌ சரம்‌ இயங்கும்‌. இதில்‌ ஒரு நாழிகைக்‌ குறைந்தாலும்‌ இருபது வயது குறையும்‌. ச–6

இதுமட்டும்‌ அல்லாமல்‌ சரம்‌ உதிக்கும்‌ போது ஸ்ரீபோகம்‌ செய்தால்‌ அந்த வேளையில்‌ கர்ப்பம்‌ தரிக்கும்‌. பிள்ளைக்கு வயது குறையாது என்று அறியவும்‌. கெடுதி வருமோ ? வராதோ? என்றால்‌ சந்திரன்‌ எனில்‌ வரும்‌. சூரியன்‌ எனில்‌ வராது. சந்திரனில்‌ இருந்து ஓடினால்‌ கொஞ்சம்‌ வந்து போகும்‌. அடைப்பட்டால்‌ வராது எனவும்‌ அறியலாம்‌.
பக்கம்‌ பதினைந்திற்கும்‌ காலம்‌ அறிதல்‌ அமரபட்சம்‌ சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதமை முதல்‌ பதினைந்து நாளும்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌.

பூர்வபட்சம்‌
சூரிய உதயம்‌ தொடங்கிப்‌ பிரதிமை முதல்‌ காலம்‌ பதினைந்து நாட்களும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. இவ்வாறு இயங்கினால்‌ வியாதியும்‌, கேடும்‌ விளையும்‌. மழை நாளிலும்‌
அகப்படுவர்‌ எனவும்‌ அறியலாம்‌.

பஞ்சபூதம்‌ சந்திரன்‌ சூரியனில்‌ இயங்கும்‌ வகையறிதல்‌
பிரதிவிக்கு 1 1/, நாழிகை (நிமிடம்‌)
அப்புவுக்கு 1 1/, நாழிகை மிடம்‌)
தேய்வுக்கு 1 நாழிகை இமிடம்‌)
வாய்வுக்கு 1 5/, நாழிகை மிடம்‌
ஆகாசத்துக்கு 1 நாழிகை மிடம்‌
ஆக நாழிகையின்‌ படி பிரதானத்தில்‌ ஐந்து நாழிகையாகச்‌ சந்திரன்‌ கலையில்‌ மூன்று மூன்று பிரகாரமாகப்‌ பிரவேசிக்கும்‌.|

பகலில்‌ 6 பிரகாரமும்‌, இரவில்‌ 6 பிரகாரமும்‌ ஓடும்‌. இவ்வாறு இரவுபகலாக 12 பிரகாரமும்‌ ஓடுவதற்கு ஐந்து நாழிகைக்கு ஒர்‌ இராசியாகப்‌ பனிரெண்டு இராசியிலும்‌
பனிரெண்டு இராசியும்‌ பனிரெண்டு பிரகாரம்‌ ஒடும்‌. ஆக இரவுபகலாகக்‌ கணக்கிட்டு 60 நாழிகையும்‌ வெற்றி, தோல்விக்‌ கணக்கிட்டுக்‌ கூறமுடியும்‌. வெல்வது யாரென்று கேட்டு
வருபவர்களுக்கு இருவர்‌ பேரின்‌ எழுத்தைக்‌ கணக்கிட்டுக்‌ கொண்டு, குறைந்த எழுத்துப்‌ போக உயர்ந்த எழுத்தை உடையவன்‌ வெல்வான்‌ என்று கூறமுடியும்‌.

நாளுக்கு ராசி இயங்கும்‌ விதம்‌
மேசம்‌ – 41, நாழிகை, ரிசபம்‌ – 4 1/, நாழிகை, மிதுனம்‌ –
5 1, நாழிகை, கற்கடகம்‌ — 5 1/, நாழிகை, சிம்மம்‌ – 5 17, நாழிகை,
கன்னி – 5 நாழிகை, துலாம்‌ – 5 நாழிகை, விருச்சிகம்‌ – 5 1,
நாழிகை, தனுசு – 5 1, நாழிகை, மகரம்‌ – 5 7, நாழிகை, கும்பம்‌ 44, நாழிகை, மீனம்‌ – 4 17, நாழிகை, இராபகம்‌ 50 நாழிகையும்‌ சரியாக இயங்கும்‌ என்று அறியவேண்டும்‌.

யாத்திரை வேளை அறியும்‌ முறை
செவ்வாய்‌, வெள்ளி – காலமே இரசித வேளை. ஞாயிறு, புதன்‌, சனி – இம்‌ மூன்று நாட்களும்‌ தாமித காலம்‌. திங்கள்‌, வியாழன்‌ – இரண்டு நாட்களும்‌ சாந்தமான வேளை.
மற்ற நாட்களும்‌, நாழிகையும்‌ சாந்தமான வேளை. இப்படி மாறிமாறி வரும்‌ என்பதை அறியவேண்டும்‌.

ஓருவன்‌ எங்கே என்று கேட்பவர்கள்‌ வந்தால்‌
பிரதிவியாகில்‌ வீற்றிருப்பான்‌. அப்புவாகில்‌ முற்றத்தில்‌ இருப்பான்‌.
தேயுவாகில்‌ வருவான்‌. வாயுவாகில்‌ வீற்றிருப்பான்‌. ஆகாயமாகில்‌ மலை கடலுக்கு அப்பால்‌ இருப்பான்‌.

வருவானோ ? வரமாட்டானோ ? என்று கேட்பவர்களுக்கு
பிரதிவியாகில்‌ நிற்கிறான்‌. அப்புவாகில்‌ மீண்டும்‌ வருவான்‌. தேயுவாகில்‌ வழிப்‌ புறப்பட்டான்‌. வாயுவாகில்‌ ஊரில்‌ இருப்பான்‌. ஆகாயமாகில்‌ ஒரு நாழிகைக்குள்ளே
வருவானென்று சொல்லவும்‌.

மூவகை இராசியை அறியும்‌ முறை
சூரியன்‌ – சரராசி, சந்திரன்‌ – இராசியின்‌ இருபுறமும்‌ ஒடும்‌. அக்கினி – உபயராசி என்பதாகும்‌. பஞ்ச பூதங்களும்‌ இயங்கும்‌ விதம்‌ பிரதிவி பிரதிவி இயங்கும்‌ போது கோவில்‌ கட்ட, பிரதிட்டை செய்ய, வீடுப்புக, ஆபரணம்‌ வாங்க, பட்டம்‌ கட்ட, முடிச்‌ சூட்ட
முதலான காரியம்‌ மேற்கொள்ளவும்‌ மாமரம்‌ வைக்கவும்‌ நன்றாகும்‌.

அப்பு
அப்பு இயங்கும்‌ போது மலரி, வாவி, குளம்‌, கிணறு, சோலை, யாத்திரை, உழுதல்‌, கவி உரைக்க, மணம்‌ செய்ய மிகவும்‌ நன்றாகும்‌.

தேயு
கொடியது செய்ய, பிணி தீர்க்க நன்று.

வாய்வு
ஆனை, குதிரை தேரேறுதல்‌ நன்று.

ஆகாயம்‌
அமைதியாக இருப்பது நன்று. இப்படி ஐந்து பிரதானமும்‌’ இயங்கும்‌ வழியறிந்து செய்யவும்‌.

சரம்‌ இயங்குவதை அறிதல்‌
ஆராதாரத்தை ஊடுருவினால்‌ பிராண நாடியில்‌ நாளொன்றுக்கு வாசி 21600 சுவாசமோடும்‌. இதில்‌ 16400 சுவாசம்‌ உள்ளேயும்‌, இதில்‌ 7200 சுவாசம்‌ வெளியேயும்‌ இயங்கும்‌. 16100 சுவாசம்‌ சரீரத்தில்‌ நின்று உபத்திரம்‌ செய்து 12 அங்குலம்‌ மாறுப்பட்டு 4 அங்குலம்‌ புறம்பாகப்‌ போகும்‌.

வாரப்‌ பலன்‌ அறிதல்‌
ஞாயிறு தப்பில்‌ வியாதி திங்கள்‌ தப்பில்‌ வலி, போக்குண்டாகும்‌. செவ்வாய்த்‌ தப்பில்‌ சாவு நிகழும்‌. புதன்‌ தப்பில்‌ கலகம்‌ வியாழன்‌ தப்பில்‌ இராசாவுக்குத்‌ துன்பம்‌. வெள்ளி தப்பில்‌ ஊர்‌ விட்டுப்‌ போகும்‌ நிலை ஏற்படும்‌. சனி தப்பில்‌ பஞ்சம்‌ உண்டாகும்‌.

ஒரு காரியம்‌ பொய்யா அல்லது உண்மையா என அறிதல்‌
சந்திரன்‌ என்றால்‌ பொய்‌, சூரியன்‌ என்றால்‌ மெய்‌ என்று அறியவும்‌.
காலமறிதல்‌ சூரியன்‌ ஒரு நாள்‌ ஓடினால்‌ மூன்று வருடத்தில்‌ மரணம்‌. இருபுறத்திலும்‌ மாறாமல்‌ பத்து நாழிகை இரவும்‌ பகலும்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. மூன்று நாட்கள்‌ ஒரே பக்கமாக ஒடினால்‌ ஒரு வருடத்தில்‌ மரணம்‌, வாயினால்‌ ஓடினால்‌ இரண்டு
நாட்களில்‌ மரணம்‌. எக்காலமும்‌ இரவு முப்பதும்‌ சந்திரனிலும்‌ இயங்கினால்‌, பகல்‌ முப்பதும்‌ சூரியனிலும்‌ மாறாமல்‌ இயங்கினால்‌ நல்ல சிவயோகியாவான்‌. ஒரு புறத்தில்‌ ஆறு நாட்கள்‌ ஓடினால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌, பத்து நாள்‌ ஓடினால்‌ முப்பத்து இரணடு நாளில்‌ மரணம்‌.

சூரிய தரிசனம்‌
காற்று அடிக்காத போது மதியத்தில்‌ சூரியனை நோக்கிப்‌ பார்த்து நிலத்திலே குழிவெட்டி குழியில்‌ உமிழ்ந்து அதைப்‌ பார்த்தால்‌ “பஞ்ச வர்ணம்‌” – தோன்றி வில்‌ போல்‌ கண்டால்‌ வியாதியும்‌ சாவும்‌ அவ்வாண்டிலிருந்து மூன்று வருடத்திற்கும்‌ இல்லை. முறிந்து வில்லாய்‌ தோன்றினால்‌ பத்தாண்டில்‌ சாவு. அந்த முறிந்த வில்லில்‌ ஒரு பெண்‌ சொரூபம்‌ தோன்றினால்‌ ஆறாம்‌ பிறையில்‌ சாவு உண்டாகும்‌.

சந்திர தரிசனம்‌
பூர்ண சந்திரனில்‌ காற்றடிக்காத வேளையில்‌ செப்பு சட்டியில்‌ பசுவின்‌ நெய்‌ விட்டு அதனுள்‌ சந்திரனைப்‌ பார்த்தால்‌ சாதாரணமாகத்‌ தெரிந்தால்‌ ஆயுசு உண்டு. சிவப்பாகில்‌ வாழ்வு உண்டு. பச்சையாகில்‌ வியாதியுண்டு. பொன்‌ நிறமாக இருந்தால்‌ கேடு உண்டு. கறுப்பாகில்‌ சாவு உண்டு.

இதுபோல்‌ இன்னொரு முறையும்‌ உண்டு. மதியும்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌. வடக்கு, தெற்கு மதியானத்தில்‌ குறைந்தால்‌ மூன்று பிறையில்‌ மரணம்‌. தெற்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ ஆறு பிறையில்‌ மரணம்‌.

கிழக்கு மதியத்தில்‌ குறைந்தால்‌ இரண்டு பிறையில்‌ மரணம்‌. நடுவில்‌ குறைந்து பள்ளமாக இருந்தால்‌ ஒரு பிறையில்‌ மரணம்‌, சர சாத்திரம்‌ உச்சித்‌ துடிக்கும்‌ போது அவ்வாண்டில்‌ மரணம்‌. கண்டம்‌ துடிக்கும்‌ போது இரண்டாண்டில்‌ மரணம்‌. புயந்துடிக்கும்‌ போது ஆறு திங்களில்‌ மரணம்‌. கன்னம்‌ விடாமல்‌ துடிக்கும்‌ போது மூன்று திங்களில்‌ மரணம்‌.

இடக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது தூரத்திலிருந்து வருவார்‌. வலக்‌ கன்னம்‌ துடிக்கும்‌ போது விருந்து வரும்‌. உருத்‌ தெரியாமல்‌ கண்ணொளி மயங்கில்‌ மூன்று நாளில்‌ மரணம்‌.

கனவின்‌ குறி
தென்திசையிலிருந்து இரதம்‌ வரக்‌ கண்டால்‌ மூன்றாண்டில்‌ மரணம்‌. அருந்ததி தெரியாமல்‌ இருந்தாலும்‌, தன்‌ மூக்கின்‌ முனைத்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌.

இதழ்‌ நாக்கிற்கு இடப்புறம்‌ எரிச்சல்‌ கண்டால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌. உதடு, நாக்கு, பல்‌, தாது இவை கருத்துப்போனால்‌ ஆறு மாதத்தில்‌ மரணம்‌.

சிறுத்த இடைப்‌ பருத்து, மார்பும்‌ பருத்தால்‌ சிறிது நாட்களில்‌ மரணம்‌. தண்ணீர்‌, கண்ணாடி, நெய்‌ இதில்‌ தன்‌ சிரசு தெரியாமல்‌ இருந்தால்‌ சிற்சில நாளில்‌ மரணம்‌.

மகுடம்‌ கையினால்‌ செவியை மூடி வாக்கியங்கள்‌ உரைத்தாலும்‌ கேட்காமல்‌ இருந்தாலும்‌, பருத்த உடல்‌ சிறுத்தாலும்‌ ஒரு மாதத்தில்‌ மரணம்‌ அடைவான்‌. தன்‌ நிழல்‌
தெற்குச்‌ சாய்ந்தாலும்‌, தன்‌ நிழல்‌ தெரியாமல்‌ இருந்தாலும்‌ ஒரு மண்டலமான 48 நாட்களில்‌ மரணம்‌.

குருபுத்திரனுக்குச்‌ சித்தியாவும்‌ கனவின்‌ குறி பேய்‌, பூதம்‌, இராட்சதர்‌, கருங்காகம்‌, குரங்கு, புலி, கரடி, செந்நாய்‌ இவை கனவில்‌ தினசரி வந்தால்‌ நல்ல பக்குவமான
60, 70, 80 தில்‌ மரணம்‌. எண்ணெய்த்‌ தேய்க்கவும்‌, முடிக்‌ கத்தரிக்கவும்‌, தென்‌ திசையிலிருந்து ஒருவன்‌ ஓலைக்‌ கொண்டு வந்து அழைத்துப்‌ போகக்‌ கண்டால்‌ ஒரு திங்களில்‌ மரணம்‌.

கல்யாணம்‌ செய்யவும்‌, கருமேனி உடையவனாகவும்‌, கருங்காவி, தடி வைத்திருத்தல்‌, கரம்‌ கூப்பிட, தலையில்‌ முண்டாசுக்‌ கட்டியிருத்தாலும்‌ இவர்கள்‌ யாரேனும்‌ வந்து
அழைத்தால்‌ ஒரு மண்டலத்தில்‌ மரணம்‌ உண்டாகும்‌.

கைக்கொண்டு தன்‌ தலையில்‌ கைவைத்து ஒருவர்‌ பேசுவதைக்‌ கேட்காமல்‌ போனால்‌ அந்த மாதத்தில்‌ மரணம்‌.

வாரப்பலன்‌
திங்கள்‌, புதன்‌, வெள்ளி ஆகிய மூன்று நாளும்‌ சந்திரன்‌ இயங்க வேண்டும்‌. சனி, செவ்வாய்‌, ஞாயிறு ஆகிய மூன்று நாளும்‌ காலையில்‌ சூரியன்‌ இயங்க வேண்டும்‌. வியாழனுக்கும்‌, பூர்வ பட்சத்திற்கும்‌, அமரபட்சத்திற்கும்‌ சந்திரன்‌ சூரியன்‌
இரண்டிலும்‌ இயங்கவேண்டும்‌. பூர்வ பட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌. அமரபட்சத்திற்குச்‌ சந்திரன்‌ இயங்கவேண்டும்‌.


மெளனம்‌ எது? சமாதி எது? – சரவித்தை – 8

பிரம்ம ஞானிகளுக்குச்‌ சர்வ வாசனைகளும்‌ சூனியமாகும்‌. மெளனத்தை விட உயர்ந்தது யாதொன்றும்‌ இல்லை. மெளனம்‌ என்றால்‌ பிரபஞ்ச தர்மசம்பந்தங்களை விட்டுச்‌ சகல சங்கல்பங்களையும்‌ ஒழித்து பிரம்ம சொரூபனாயிருக்கப்‌ பட்டவனுக்கு ஆனந்தத்தைக்‌
கொடுக்கும்‌. இந்த மெளனமே “தியானம்‌’ – என்று சொல்லப்படும்‌.

மெளனம்‌ என்றால்‌ யாருடனும்‌ பேசாமல்‌ வாய்மூடிக்‌ கொண்டிருப்பது அன்று. மனத்தை வெளியில்‌ விடாமல்‌ நிறுத்துவதே மெளனம்‌ ஆகும்‌.

“பால்யம்‌” – என்றால்‌ சிரவணம்‌. “பாண்டித்தியம்‌” – என்றால்‌ மனனம்‌. “மெளனம்‌” – என்றால்‌ நிதித்தியாசனம்‌, இம்மூன்றையும்‌ விட்டுத்‌ தன்னைத்‌ தான்‌ மறந்து பிரம்ம
சொரூபியாக இருப்பதே மெளனம்‌.

கடாகாசம்‌, மஹாகாசம்‌ ஊகமாவது போல்‌ ஆத்மாவே பரப்பிரம்மம்‌ என்றும்‌, பரப்பிரம்மமே “ஆத்மா” – என்றும்‌ ஐக்கிய பாவத்தை அடைந்து, ஆத்ம சொரூபியாகிய, நீயே பிரம்மமென்று நிச்சயித்துச்‌ சகல எண்ணங்களையும்‌ மறந்து கல்சிலை வடிவமாய்‌ ஆனந்தப்படுவதே மெளனபாகும்‌.

வாசனைத்‌ திரவியங்களும்‌, மோட்சத்தின்‌ இச்சையும்‌ விட்டு, உலகம்‌ அனைத்தும்‌ “அசத்தியம்‌” – என்றும்‌, “பிரம்மமே சத்தியம்‌” – என்றும்‌, பிரம்மத்தைத்‌ தியானிக்க வேண்டும்‌. பிறகு அந்தத்‌ தியானத்தையும்‌ விட்டு மனோ புத்திகள்‌ இரண்டையும்‌
சஞ்சலமில்லாமல்‌, அசையாமல்‌, திடமாக நிறுத்தி, இருதயத்திலிருக்கும்‌ காமக்‌ குரோதாதிகளாகிய அழுக்குகளை எல்லாம்‌ நீக்கி, மனத்தை நிர்மலமாகச்‌ செய்து கொண்டு அந்தப்‌ பரப்பிரம்மமே நானென்றும்‌, நானே சர்வமென்றும்‌ மெளனமாகவும்‌, அமைதியாகவும்‌ இருப்பதே பரமசுகம்‌.

ஆத்ம சொரூபியாகிய நானே பிரம்மமென்று ஐக்கிய பாவத்தில்‌ திடமாய்‌ நின்று, சகலமனோ விருத்திகளும்‌, சூனியமாய்‌ எந்த எண்ணங்களும்‌ இல்லாமல்‌ கண்களுக்குக்‌
காணப்படும்‌ சகல பொருட்களும்‌, சகல எண்ணங்களும்‌ மறந்து, தானே தானாகச்‌ சக்தி மாந்தனாய்‌ இருப்பதே சமாதியாகும்‌.

© 2020 Spirituality