களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். அப்படியே திருமண வாழ்க்கை அமைந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத, நிம்மதியற்ற நிலை ஏற்படும். இது போன்ற கெடுதிகள் எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது 5ம் பாவமாகும்.
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். அப்படியே திருமண வாழ்க்கை அமைந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத, நிம்மதியற்ற நிலை ஏற்படும். இது போன்ற கெடுதிகள் எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது 5ம் பாவமாகும்.
இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் பூமிக்கு பக்கவட்டு திசையில் பூமியை கடக்கும் பொழுது பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிச் செல்வது அல்லது பின்னோக்கிச் செல்வது போன்று ஒரு தோற்றம் கிடைக்கும். அந்த தோற்றத்திற்கான ஜோதிட விதியே வக்கிரம் என பெயர்.
செவ்வாய் : ஆட்சி – மேஷம், விருச்சிகம்; உச்சம் – மகரம்; நீசம் – கடகம்.
புதன் : ஆட்சி – மிதுனம், கன்னி; உச்சம் – கன்னி; நீசம் – மீனம்.
குரு : ஆட்சி – தனுசு, மீனம்; உச்சம் – கடகம்; நீசம் – மகரம்.
ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு ஏற்படும். ராசிக்கு 9ம் இடத்தில் சனி இருந்தால் அவருக்கு பொது விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படும்.
சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம் கிடைக்கும்.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்கிறது சாஸ்திரம்.
எடுத்துக்காட்டாக ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி மனைவியை குறிக்கிறார், பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் இடத்து அதிபதி தனக்கு வரப்போகின்ற கணவனை குறிக்கிறார், இந்த ஏழாம் இடமும், ஏழாம் இடத்து அதிபதியும் பாதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்துவிடுகிறது.
ஜாதகத்தில் உள்ள முதல் வீடு (கட்டம்)
லக்கின பாவம் என கூறுவர். இது அந்த ஜாதகத்தினரின் உடல் வாகு, அழகு, நிறம், ரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலை அமைப்பு, வாழ்க்கை அனுபவிக்கும் அனைத்து சுகங்கள், சுப நிகழ்ச்சிகளை குறிக்கும். மகிழ்ச்சியை அனுபவிக்கத்தல், அவருக்கான ஆயுளை குறிக்கும் பாவமாகும்.
திருமணத்துக்கு முன்னோ அல்லது பின்னோ வாழ்க்கை துணையினை குறிப்பது களத்திரம் என்ற சொல் ஆகும். ஜாதகத்தில், 7ஆம் வீடு களத்திர ஸ்தானம் எனப்படும். அதாவது, ஆணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் மனைவியினையும் பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் அவரது கணவனை குறிக்கும்.