11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும்.
11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும்.
பத்தாவது வீட்டில் சூரியன் இருப்பது சாதகமான முடிவுகளைத் தரும். இது உங்களை அறிவார்ந்தவராகவும், பிரபலமாகவும் ஆக்குகிறது. எதிலும் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியைத் தரும்.
குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் நிர்தோஷம். அதாவது இவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். அதே போல் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த செவ்வாய்க்கும் பரிகார செவ்வாய் என்று பெயர்.
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் : பொதுவாகப் 10 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது என்பது அதிகமான நன்மைகளைத் தான் செய்யும். அதிலும், குரு போன்ற சுப கிரக பார்வை பெற்று இருந்தால்… ஜாதகர் மிக்க கடமை உணர்ச்சியைக் கொண்டு இருப்பார். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் 8-ஆம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு வெறித்தனமான உத்வேகம் இருக்கும். செவ்வாய் இது போன்ற ஜாதகத்தில் பாதிப்படையாமல் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்வின் உச்ச நிலையை அடைவார். ஏராளமான சொத்துக்கள், அபரிமிதமான பண வரவு, ஆடை ஆபரணங்கள் என அவர் வாழ்வே ஒளிமயமானதாக இருக்கும்.
ஜாதகத்தில் குருவும், சந்திரனும் 1ம் இடத்தில் சேர்ந்திருப்பின் அதற்கு குரு சந்திர யோகம் என்று பெயர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 2ம் இடத்தில் குரு இருப்பின் சகட யோகமாகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 3ம் இடத்தில் குரு இருப்பின் எந்த யோகமும் இல்லை.
அதாவது லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
களத்திர தோஷம் ஏற்படுவதால் திருமணத் தடை ஏற்படும். அப்படியே திருமண வாழ்க்கை அமைந்தாலும் அவரின் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத, நிம்மதியற்ற நிலை ஏற்படும். இது போன்ற கெடுதிகள் எல்லாவற்றிற்கும் காரணமாக விளங்குவது 5ம் பாவமாகும்.
இதில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் பூமிக்கு பக்கவட்டு திசையில் பூமியை கடக்கும் பொழுது பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகிச் செல்வது அல்லது பின்னோக்கிச் செல்வது போன்று ஒரு தோற்றம் கிடைக்கும். அந்த தோற்றத்திற்கான ஜோதிட விதியே வக்கிரம் என பெயர்.