உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

பத்தாமிடாதிபதியின் வலுவை தெரிந்துகொள்ள நவாம்ச சக்கரத்தோடு தசாம்ச சக்கரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் ஜாதகரது செயலையும் கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்ச சக்கரத்தின் சிறப்பான பலன்கள்:

  1. தசாம்ச சக்கரத்தில் 3வது பாவமும் அதன் கேந்திரங்களான 6,9,12ம் பாவங்களும் முயற்சியைக் குறிக்க உதவக் கூடியதாகும். இவைகளின் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10ம் அதிபதிகளும் அதிக நன்மையைக் கொடுக்கும்.
  1. தசாம்சக் கட்டத்தில் 10ம் இடத்தில் உள்ள கிரகங்கள் சுபகிரகங்கள் ஆனாலும் பாவக்கிரகங்களானாலும் நன்மையே செய்யும்.
  2. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் 4ம் இடம் சுகஸ்தானம் ஆகும். இது தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமத்தையும் உருவாக்குவதாகும். அதாவது நான்காமிடம் சுகத்தைக் தரும் 10ம் இடம் செயலைக் குறிக்கும். ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்படும் தன்மை நின்று விடும். ஆகவே தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமரும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.

    எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை 16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் :

    1. ராசி – மெய், நிறம், தோற்றம்
    2. ஹோரா – செல்வநிலை
    3. திரேக்காணம் – சகோதரன், சகோதரி
    4. சப்தாம்சம் – குழந்தைகள்
    5. நவாம்சம் – கணவன் அல்லது மனைவி
    6. தசாம்சம் – தொழில்
    7. துவாதசாம்சம் – பெற்றோர்
    8. திரிம்சாம்சம் – விதி
    9. சோடசாம்சம் – வாகனம்
    10. சஷ்டியாம்சம் – பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
    11. சதுர்த்தாம்சம் – அதிர்ஷ்டம்
    12. விம்சாம்சம் – கடவுள் நம்பிக்கை, குலதெய்வம் பக்தி
    13. சதுர்விம்சாம்சம் – கல்வி
    14. பம்சாம்சம் – உடல் வலிமை
    15. சுவேதாம்சம் – சுகம்
    16. அக்ஷவேதாம்சம் – குணம்

உப நட்சத்திராதிபதிகள் புரியும் அற்புதங்கள்

ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. இறைவனின் படைப்பில் யார் எப்போது எந்த நிலையில் இருந்து செயல்படவேண்டும் என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிரினங்களுக்கும் பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டது. படைப்பின் காரணங்களை ஆன்மீகம் மூலமும் ஜோதிடம் மூலமும் ஆழ்ந்து அறிந்தவர்கள் எல்லாம் அவன் செயல் என்று அமைதி பெறுகிறார்கள். இயற்கை எனும் இறைவன் வகுத்த நியதிகளை மீற முயல்கிறான் மனிதன். முடியாத போது சோர்வுறுகிறான் அல்லது தனது ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் பிற மனிதனையும் நாசம் செய்யத்துணிகிறான். இன்றைய உலக வன்முறைகளுக்கும் தீவிரவாதத்திற்கும் இதுவே அடிப்படை.

கே.பி. முறை ஜோதிடத்தில் நட்சத்திராதிபதிகள், உப நட்சத்திராதிபதிகள் மற்றும் உப உப நட்சத்திராதிபதிகள் முறையானது மிகவும் நுணுக்கமான பல விஷயங்களை அறிய உதவுகிறது. ஒருவரது வாழ்வில் என்ன சம்பவங்கள் நடக்கும் என்பதையும் அவை எப்போது நடக்கும் என்பதையும் அறிய உப நட்சத்திராதிபதிகளை ஆராய வேண்டியது அவசியம். அஷ்டவர்க்கம், யோகங்கள், ஷட்பலம், ஷோடஷாம்சம் போன்றவை பாரம்பரிய ஜோதிடத்தின் பலம் எனில் நட்சத்திராதிபதி, உப நட்சத்திராதிபதி, உப உப நட்சத்திராதிபதி போன்றவை கே.பி முறையின் முக்கிய பலம் எனலாம்.

நட்சத்திராதிபதி கிரகம் ஒரு வேலைக்குப் பொறுப்பாளி என்றால் உப நட்சத்திராதிபதி கிரகமே அக்கறிப்பிட்ட பணியை செய்யும் கிரகமாகும். உப உப ந்சத்திராதிபதி கிரகம் அக்குறிப்பிட்ட பணிக்கு உறுதுணையாக இருக்கும் கிரகமாகும்.

ஒரு ஜாதக உதாரணத்தை காணலாம் வாருங்கள் :

உப நட்சத்திராதிபதி உச்சமாக வந்துவிட்டால் அக்கிரகம் உச்ச பலனை தனது திசா – புக்திகளில் தரவேண்டும். இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியே உச்சமாகியுள்ளார். அப்படி உச்சமான லக்னாதிபதியே உச்சமாகியுள்ளார். அப்படி உச்சமான லக்னாதிபதி புதன் ஐந்து கிரகங்களுக்கு உப நட்சத்திரமாகியுள்ளது இந்த ஜாதகத்தின் ராஜ யோகங்களுக்கு காரணமாகிறது.

வித்யாகாரனான லக்னாதிபதி புதன் லக்னத்தில் உச்சம். லக்னத்தில் நீசமான வாக்கு ஸ்தானாதிபதி சுக்கிரனையும் புதன் தனது உச்ச பலத்தால் நீச பங்கப்படுத்துகிறார். சுக்கிரனின் உப நட்சத்திராதிபதியும் புதன் என்பது இங்கு சுக்கிரனுக்கு கூடுதல் பலம். உச்சனுடன் இணையும் நீச கிரகம் நீச பங்கப்படும் என்பதோடு உச்சனை உப நட்சத்திராதிபதியாகக் கொண்ட நீச நிலையிலிருக்கும் கிரகங்களும் நீச பங்கமடையும் ராஜ யோகத்தை தரும் என்பது ஒரு முக்கிய விதி. (கே.பி முறையில் ஜோதிட ஆய்வு செய்பவர்கள் இதை நன்கு உணரலாம்.) லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி சூரியன் என்பதும் அதன் உப நட்சத்திராதிபதி புதன் என்பதும் ஜாதகர் தம் வாழ்வில் ஒரு சிறந்த தலைவராக பின்னாளில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது ஜாதகருக்கு இறைவன் நிர்ணயித்த கர்மா என்பதை அறியலாம்.

லாப ஸ்தானமான 11ம்மிடத்தில் சனியுடன் இணைந்து நின்ற ராகு சனியைப் போன்று செயல்படுபவர். மேலும் ராகுவின் நட்சத்திராதிபதி சனி என்பதும் உப நட்சத்திராதிபதி உச்சனான புதன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

வித்யாகாரகன் புதன் உச்சமானதால், ஜாதகர் புதனின் அம்சமாகவே – ஆசிரியராக வாழ்ந்து அத்தொழிலுக்கு சிறப்பு செய்தார். லக்னாதிபதியும் உச்சனுமான புதனை உப நட்சத்திரமாகக் கொண்ட ராகு திசையின் இறுதியில் ஜாதகர் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாண்டுகள் (1952-1962) அப்பணிக்கு சிறப்பு சேர்த்தார். பிறகு இந்தியாவில் இரண்டாவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு (1962-1967) போற்றுதலுக்குரிய ஜனாதிபதியாக அறியப்பட்டார். ராகு திசையை அடுத்து வந்த பரம சுபக்கிரகமான குரு திசை ஜாதகரின் அறிவை உலகிற்குப் பறைசாற்றி புகழடையச் செய்தது. குருவி;ன் உப நட்சத்திராதிபதியும் லக்னாதிபதியான உச்ச புதனே என்பதும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

கால சர்ப்ப யோகத்தின் விளைவுகளை எடைபோட இன்றும் ஜோதிட ஆய்வாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஜாதகம் இது.

விரையாதிபதி கிரகமானாலும் சூரியன் ராசிக்கு அதிபதியாக வந்துவிட்டதால் தனது காரகப்படி ஜாதகரை தலைமைப்பதவிக்கு உயர்த்த வேண்டும். எனும் விதிப்படி சூரியனும் ஜாதகர் தனது வாழ்வின் மிக உயர்ந்த பதவியை எட்ட உதவினார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஜாதகர் நம் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா, இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். ஆசிரியர் தொழிலுக்குச் சிறப்பு செய்ததால் அவரது பிறந்த நாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம் என்பதும் நாமனைவரும் அறிந்ததே.

இது மற்றொரு ஆண் ஜாதகம் :

ஒருவர் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க வேண்டும் எனில் மூன்றாவது பாவம், அதன் அதிபதி, விரைவாக சிந்தித்து செயல்பட சந்திரனின் பலமும், சாதுரியமான செயல்பாட்டிற்கு புதனின் பலமும் அவசியம்.

ஜாதகத்தில் சந்திரனும் புதனும் உச்சம். லக்னம் உச்ச புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. அதன் உப நட்சத்திராதிபதியும் புதனே என்பது மிகச் சிறப்பு. லக்னாதிபதி செவ்வாய் புத்திகாரகன் புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் அமைந்தது ஒருவகையில் சிறப்பென்றாலும் இரண்டும் பகைக் கிரகங்கள் என்பது மறுவகையில் குறையே. ஜாதகத்தில் மூன்றாமதிபதி சனி நீசமடைந்து வக்ரமானதால் நீச பலம் குறைகிறது. முக்கியமாக சனியின் உப நட்சத்திராதிபதி உச்ச சந்திரன் என்பதால் சனி முழுமையாக நீசபங்கமடைந்து ராஜயோகத்தை தரவேண்டியவராகிறார். ஒரு விளையாட்டு வீரனுக்குரிய அமைப்புகள் அனைத்தும் ஜாதகத்தில் உள்ளன.

ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல சாதனைகளைப் புரிந்தவர். முக்கியமாக ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி பிரம்மிக்கத்தக்க உலக சாதனை படைத்தவர்.

ஏழாமிடத்தில் உச்சமான சந்திரனின் உப நட்சத்திராதிபதி ராகு என்பதாலும் 7ம்மிடாதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரனின் உப நட்சத்திராதிபதியும் ராகு என்பதாலும் ஜாதகர் குழந்தையுடன் விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து வாழ்வளித்தார். சந்திரன் 7ம்மிடத்தில் உச்சமானாலும் அவர் களங்கத்தைக் குறிக்கும் தேய்பிறைச் சந்திரன் என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

ராகுவின் காரகத்துவங்களுள் களங்கம் மற்றும் விவாகரத்து போன்றவற்றை முக்கியமானவையாகும். (ஜோதிடர்கள் மறுமணங்கள் சாதாரணமாக நடக்கும் இன்றைய கால கட்டத்தில் இத்தகைய அமைப்புகளை பொருத்தம் பார்க்கும் போது ஆராய்வது அவசியம்). சுகஸ்தானமான நான்கமிடத்தில் ராகு நின்று குடும்பகாரகன் குரு விரையத்தி;ல் அமைந்து சனியால் பார்க்கப்படுவது போன்றவை ஜாதகரின் திருமண நிகழ்வை படம் பிடித்துக் காட்டுகின்றன.

லக்னாதிபதி செவ்வாய் தலைமைப் பண்புகளுக்குரிய சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து உச்ச புதனுடன் இணைந்ததால் அணியை வழிநடத்தும் தலைமைப் பதவிக்கும் உயர்ந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அணில் கும்ப்ளே.

வாஸ்து சாஸ்த்திரம்

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம் சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்த்திரம் மற்றும் பெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும். மேலும் வாஸ்து மற்றும் ஃபெங்சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து பின்பற்றிப் பாருங்கள்…

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்த்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.

ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கம் இருக்க வேண்டும்.

சூரியன் உதிப்பதற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்குப் பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு தான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவகர்ளுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள்.

உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனோல் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.

இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். உங்ள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்ள் பயன்படுத்துவதுதான் சிறப்பு.

இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.

அதாவது, பார்வையிலும் படாத ஒரு இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலும் அதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்களது வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிகப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

வாஸ்து பொதுவான குறிப்புகள்


கிழக்கு – குடிநீர் ஆதாரம்
தென்கிழக்கு .. சமையலறை
தெற்கு … இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கையறை
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர்
வடக்கு … குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியாக அமைக்கவும்.
வடகிழக்கு .. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்.

6 அடி பலன் – நன்மை ஏற்படும்
7 அடி பலன் – தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி பலன் – வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.
9 அடி பலன் – துன்பம் துயரம்
10 அடி பலன் – பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.
11 அடி பலன் – எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடும்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.
12 அடி பலன் – துயரம் புத்திரசோகம்
13 அடி பலன் – துன்பம் நோயினால் அவதி
14 அடி பலன் – பொருள் இழப்பு, கவலை
15 அடி பலன் – துன்பம் துயரம்
16 அடி பலன் – சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
17 அடி பலன் – தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.
18 அடி பலன் – கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 அடி பலன் – புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 அடி பலன் – பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உல்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
21 அடி பலன் – வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும்.
22 அடி பலன் – மனதில் தைரிய உணர்வு மேலோங்கியிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்
23 அடி பலன் – கெடுதி ஏற்படும்
24 அடி பலன் – வரவும் செலவும் சமம்
25 அடி பலன் – மனைவிக்கு கண்டம்
26 அடி பலன் – உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதார நிலை செழித்தோங்க பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி பலன் – பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும் கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.
28 அடி பலன் – கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும் விலகி ஓடும். இன்பமாக வாழ்க்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும் எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி பலன் – பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி பலன் – புத்திர பாக்கியம் தாராளமாக இருக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
31 அடி பலன் – நல்லவர்கள் நாடி வந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரிய சித்தி உண்டு.
32 அடி பலன் – செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி பலன் – வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி பலன் – இடமாற்றம் ஏற்படும்
35 அடி பலன் – திருமகள் அருள்
36 அடி பலன் – சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி பலன் – செய்தொழில் முன்னேற்றம்
38 அடி பலன் – வறுமை, துன்பம்
39 அடி பலன் – நல்ல வாழ்வு
40 அடி பலன் – விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி பலன் – செல்வம் பெருகும்
42 அடி பலன் – அஷ்டலட்சுமி வாசம்
43 அடி பலன் – நன்மை ஏற்படாது
44 அடி பலன் – பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி பலன் – மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி பலன் – வறுமை, நோய்
47 அடி பலன் – பொருள் இழப்பு
48 அடி பலன் – தீயினால் ஆபத்து
49 அடி பலன் – தவறுகள், இழப்புகள்
50 அடி பலன் – நன்மை உண்டாகாது
51 அடி பலன் – வீண் தொல்லைகள்
52 அடி பலன் – பொருள் அபிவிருத்தி
53 அடி பலன் – பெண்களால் பொருள் நஷ்டம்
54 அடி பலன் – அரசின் சீற்றம்
55 அடி பலன் – உறவினர் விரோதம்
56 அடி பலன் – குடும்ப விருத்தி
57 அடி பலன் – சந்ததி நாசம்
58 அடி பலன் – கண்டம் ஏற்படும்
59 அடி பலன் – கவலைகள் வறுமை
60 அடி பலன் – செய்தொழில் அபிவிருத்தி

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும். என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை – வடமேற்கு திசை
புத்தக அறை – தென்மேற்குத் திசை
சமையல் அறை – தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை – தெற்குத் திசை
படுக்கை அறை – மேற்கு வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை – மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை – கிழக்கு திசை
சேமிப்பு அறை – வடக்கு திசை
கழிவறை – வடமேற்கு திசை

வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும்.

இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்க வேண்டிய, இருக்கக் கூடாத பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.

எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக் கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழைவாயில். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அது பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணருவீர்கள்.

கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஷ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள். அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

ஈசான மூலை
ஈசான மூலை (வடகிழக்கு) வழியே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது. எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதி;ர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பது போல் நிலைப்பேழை வைக்கக் கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க் துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக் கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக் கூடாது.

வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பணவிரயத்துக்கு தடை போடும். பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

அக்னி மூலை
அக்னி மூலை – தென்கிழக்கு மூலை, இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால்; பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில்சமையற்கூடம் அமைக்க இயலாவிடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு(மண்ணெண்ணை, எரிவாயு, போன்றவை) இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். விதிவிலக்காக வாயு(வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக் கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு, கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி, (செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக் கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறி;க்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விட வேண்டும். அப்படித் தொங்கும் பாத்திரங்கள் அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

குபேர (வடக்கு) மூலை
செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு) மூலை

நிருதி (தென்மேற்கு) மூலை
நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.

வீதியைப் பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும். எனவே தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில் அமைக்கும்படி நேரினும், ஈசான மூலை, அக்னி மூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.

வாயு மூலை
கழிப்பறை, குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம். குளியலறை மற்றும் கழிப்பறையல் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

நிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்;பாக வடகிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவி;க்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். தண்ணீர் அல்லது நீருற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

மையப் பகுதி
வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந்தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பிண்ணணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கயமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

வாயிற்படி, அறைகளின் அளவு
வாயிற்படி, வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும். பொதுவாக கிழக்கு, வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு. தென்கிழக்காக அமைந்து ஈசாநிமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும், மனையடிப்படி, அறைகளின் உட்கூடு அளவுகளில் 7,9,12,13,14,15 கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவது அவசியம், இடம் வீணாகக்கூடாது என 8.5, 7.5, 10.5 போன்ற அளவுகளைத் தவிர்க்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப் பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெற்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.

தொழில் வாஸ்து
தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது, தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டு இருப்பீர்கள், அலுவலகத்தில் எந்த திகையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது. அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது. தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம் வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம்.

நமக்கப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப் பின்னே அழகிய இயற்கைக் காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம். நம் அலுவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப் போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக் கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன்படுத்தலாம். தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

வாஸ்து குறைகளைப் போக்கும் சிறுபரிகாரங்கள்

ஈசான மூலையில் (வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல். வண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை) மஞ்சள் குழைத்து விட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல், மாவிலைத் தோரணம் கட்டல், அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச் சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல். இனிமையாக ஒலிக்கும் ‘வின்ட்செம்’ களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைனயில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்.

நவக்கிரகங்களும் திசைகளும்

சுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும்,
செவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும், கேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும்,
புதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும்
சந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும்
ராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும்
குருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும்
சனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன.
சூரியனின் ஒளியாகப்பட்டது அண்டம் முழுவதும் பரவியிருக்கக் கூடியது.
இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை என கூறுகின்றோம்.

© 2020 Spirituality