என்னவளே உன் பக்கம்

நிலவே! நீ ஒரு பக்கம் !
நான் ஒரு பக்கம்!
ஆனால் என் ஞாபகம் எல்லாம்
உன் ஒளியின் பக்கம்!

காற்றே! நீ தோன்றுவது எங்கோ!
நான் தோன்றுவது எங்கோ!
ஆனால் என் மூச்சு எல்லாம்
நீ வீசும் திசையான இங்கே!
Read the rest of this entry »

கவிதை

கற்பனையென்னும் பெயரிலே கவலை மறக்க
பிறர் கவலை தீர்க்க
மனதில் தோன்றி ஏட்டில் எழுத்தாய்
தோன்றும் ஓர் ஆறுதல் !

கனவுகள் என்னும் பெயரிலே
தோன்றிய சந்தோஷங்களை அனுபவிக்க
பிறர் சந்தோஷங்களை பெற
இதயத்தில் தோன்றி எழுதுகோலின் வழியாக
உருவான ஓர் இன்ப ஊற்று!

வாழ்க்கையென்னும் வழியினிலே வரும்
போராட்டங்களை எதிர்க்க
பிறர் செய்த போராட்டங்களை வர்ணிக்க
உள்ளத்தில் முடியும் ஓர் உணர்ச்சி!

எழுதியது ஜெய்கணேஷ் காலம் (24-06-97)

© 2020 Spirituality