தண்ணீரின் நான்கு முக்கிய பணிகள்

தண்ணீரானது உடலில் நான்கு விதமான முக்கிய வேலைகளைச் செய்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டு, ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

தண்ணீரின் நான்கு முக்கியப் பணிகள்:

1. தண்ணீரானது உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவ ரூபமாக சரீரத்திலுள்ள ஜீவ அணுக்களுக்கு (செல்) எடுத்துச் செல்லும் மிக முக்கியப் பணியைச் செய்கிறது.

2. தண்ணீரானது உடலினுள் உற்பத்தியாகும் ரசாயனப் பொருள்களுடன் சேர்ந்து கரைந்து சரீரம் முழுவதும் பரவுவதற்கு அத்தியாவசியமானதாகிறது.

3. தண்ணீரானது உடலின் சீதோஷ்ண நிலையை ஒரே சீராக அதிக சூடாகாமலும், அதிக குளிர்ச்சியாகாமலும் கட்டுப்படுத்தி சம சீதோஷ்ண நிலையை சரீரத்தில் பராமரித்து வருகிறது.

4. அத்துடன் நுரையீரல் வழியாகவும் சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வேர்வை மூலமாகவும் சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. சிறுநீர் மூலம் அழுக்குகளை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

© 2020 Spirituality